பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருமையில் ஒருமை

235


சிவத்து ரோகமும் நீங்கிய நாடு
முக்க ணான்விளை யாடிய நாடு
முதிய நான்மறை பாடிய நாடு
மைக்க ணாள்குழல் வாய்மொழி பாகர்
வசந்த ஆரியர் நாடெங்கள் நாடே"

"எனது நாடு நன்னாட்டின் முன்னாட்டும் நாடு: விண்ணோரும் விரும்பி வரும் நாடு; எத் திசையும் புகழ் மணக்க இருந்திலங்கும் நாடு; நீங்காத வல்வினையும் நீங்கிய நன்னாடு; அரனார் விளையாடிய திருநாடு; ஆரணம் பாடிய அருமை சான்ற நாடு; இத்தகைய பழம்பெருமை உனது நாட்டுக்கு உண்டோ?” என்று அளவிறந்த மகிழ்ச்சியால் ஆடிப் பாடினாள். இப்பாட்டில் அமைந்த நாட்டின் பெருமையை நன்றாகக் கேட்ட பொதிய மலை மாது, புன்முறுவல் பூத்துத் தன் மலையின் பழம் பெருமை கூறத் தொடங்கினாள்:

"மந்தமா ருதம்வளரும்
      மலையெங்கள் மலையே
வடகலைதென் கலைபயிலும்
      மலையெங்கள் மலையே
கந்தவேள் விளையாடும்
      மவையெங்கள் மலையே
கனகநவ மணிவிளையும்
      மலையெங்கள் மலையே
இந்தமா நிலம்புரக்கும்
      அங்கயற்கண் அம்மை
இன்பமுறும் தென்பொதிய
      மலையெங்கள் மலையே!”