பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருமையில் ஒருமை

237


என்று குறவஞ்சி சித்திர நதியின் பெருமையைச் சிந்தையாரப் புகழ்ந்தாள்.

இதைக் கேட்ட பொதியமலைக் குறமாது தனது மலையில் தோன்றும் பெரியாறென்னும் பொருதை யாற்றின் பெருமையை அழகுற எடுத்துரைத்தாள். குறுமுனிவன் வாழும் இடத்திலே தோன்றி வாணருவியாக வீழ்ந்து பொருநையாறாகப் பெருகிவரும் பொதிய மலையாற்றின் பெருமையைக் குறமாது கனிந்த சொற்களால் எடுத்துரைத்தாள்.

இவ்வாறு பொருநையாற்றின் பெருமையை வியந்து கூறக் கேட்ட குற்றாலக் குறவஞ்சி பொதிய மலையின் பெருமையை அறிந்து இரு மலையும் நிகரென்னும் இதற்கையம் உண்டோ என்னும் சமரச அறிவோடு சாந்தமாய்ப் பிரிந்து சென்றாள்.