பக்கம்:தமிழின எழுச்சி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

140 - தமிழின எழுச்சி

தங்களைத் தாங்களே இழிவுபடுத்தும் முயற்சியில் தமிழின மக்கள் இறங்குவார்களானால், அது தங்கள் அழிவுக்கே வழிவகுக்கும் என்று அனைவரும் அறிந்து கொள்வது நல்லது.

வீரமணியைத் தாக்க முயன்ற அறிவற்ற மூடர்களைக் கண்டுபிடித்துத் தகுந்த தண்டனை அளிக்கும் வகையில் காவல்துறையும் அரசும் தங்கள் நேர்மையான கடமைகளைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன், நாட்டுநலம், இனநலம் கருதும் தலைவர்களுக்குத் தக்க பாதுகாப்பும் தருதல் வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.


தென்மொழி சுவடி-18, ஓலை-12 சூலை-ஆகத்து 1982