பக்கம்:தமிழின எழுச்சி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 
கோழைத்தனங்களும் அடிமைத்தனங்களும்!


தமிழன் வீரத்தில் சிறந்தவன் என்று பெயரெடுத்தவன். கடந்த இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிசுப் படைக்கு மிகத் துணையாக நின்றவர்கள் சீக்கியர்களும் தமிழர்களுமே! அந்த நிலையில் இருந்தவன் இன்று வடநாட்டின் வல்லாண்மைக்கும் சூழ்ச்சிக்கும் அடிமையாகித் தில்லியரசுக்கு ஆலவட்டம் சுற்றிக் கொண்டிருக்கின்றான்; சீக்கியர்களோ, தில்லியின் வல்லாண்மையிலிருந்து மீட்சிபெற்றுத் தனிநாடு கோரிக்கையை முன்வைத்து விட்டனர், இவனோ இப்பொழுதைய நிலையில் படுகோழையாகிவிட்டான். படு அடிமையாகி விட்டான்! இவனை அவ்வுணர்வுகளிலிருந்து மீட்பது அருஞ்செயலாக உள்ளது. இந்த அரும்பெரும் முயற்சியில் தம் வாழ்நாள் முழுவதையுமே ஈடுபடுத்திய ஒரே தமிழினத் தலைவர், தந்தை பெரியாரே! ஆனால், அவர் வழியைப் பின்பற்றுவதாக இன்றைக்குக் கூறிக் கொண்டிருப்பவர்களோ. அவரைக் தங்கள் தனியுடைமை உரிமையாக ஆக்கிக் கொண்டதுமன்றி, அவர் இனமீட்புக்கும், இந்நாட்டு விடுதலைக்குமாகச் சேர்த்து வைத்த அரும்பெரும் ஈட்டத்தை வேறு எதுஎதற்கோ பயன்படுத்தித் தமிழ் மக்களுக்கு இரண்டகம் செய்து வருகின்றனர். தந்தை பெரியார் அந்த வகையில் பெரும் தவறைச் செய்துவிட்டார் என்பதை வரலாறு கூறாமல் போகாது. ஏனெனில்,

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

-என்னும் அரச இலக்கணம் பெரியாருக்கும் பொருந்தும். அவர் ஆட்சி செய்யவில்லையென்றாலும் தமிழினத்தைப் பொறுத்தவரையில் அவர்