பக்கம்:தமிழின எழுச்சி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

160 • தமிழின எழுச்சி

காரர்களிடமும், சுரண்டல் முதலாளிகளிடமும் பேரம்பேசி, ஊதியத்தில் பங்கு போட்டுக்கொண்டு சாப்பசி தணிக்கும் சதுர ஆட்டக் காரர்களின் பெரியாரிச, அண்ணாயிசக் கொள்கைத் திராவிடர் களுக்கோ, தமிழ்நலத்திலும் ஊற்றமில்லை; தமிழர் முன்னேற்றத்திலும் நாட்டமில்லை. அவர்கள் நினைப்பவையெல்லாம் இன்றைக்குக் கட்டி நாளைக்குச் சரிந்துபோகும் வெற்றாரவார வீணடிப்புத் திட்டங்களே! முதலமைச்சருக் கேற்ற துறையமைச்சர்கள்! துறையமைச்சர்களுக் கேற்ற முதலமைச்சர்! கடந்த ஈராயிரம் மூவாயிரமாண்டுகளாக விழுந்து கிடக் கும் இத் தமிழினம், இந்தச் சாராய வருமானத்திலா தலைதூக்கப் போகிறது? இவர்கள் நடத்தும் பரிசுச் சீட்டுத் திட்டத்தாலா, முட்டுக் கொடுத்து நிறுத்தப்பட்டுவிடப் போகிறது?

வரலாற்றை யுணராத வாய்வீச்சுகள்! அறிஞர்களை மதிக்காத ஆரவாரப் பேச்சுகள்! வெறும் வாய்ப்புரளிக்காரர்களுக்கு வாய்க்கரிசி போட்டு, வீக்கத்தை ஆக்கம் என்றும் விழுந்தெழுவதை நடிப்பு என்றும், கெக்கலிப்பைக் கலையென்றும், கேடுகளை நலன்கள் என்றும் வெட்கங்கெட்ட விளம்பரங்களால் ஆட்சி வண்டியோட்டிக் கொண்டிருக்கும், இவ்வாளுங்கட்சித் திராவிடங்களால், இவ்வேதுங்கெட்ட தமிழினத்திற்கு ஏதாவது உண்மையிலேயே முன்னேற்றம் ஏற்படுமா? அந்த மூகாம்பிகைக்கே வெளிச்சம்! மொழியின் அழிவைத் தடுக்கவும். அதனை வளர்த்தெடுக்கவும் வாய்ப்பை உருவாக்காத இவர்கள், அதனைச் சீர்திருத்தும் முயற்சிகளென ஏராளமான கோணல் மாணலான முயற்சிகளைச் செய்வதும், நான்காம் கழகம், ஆராய்ச்சிகள், அ'து, இ'து என்றெல்லாம் வந்த வேகத்தில் உளறியவர்கள், நாளடைவில் அவற்றை மறந்துவிட்டு, அன்றாட அரசியல் ஆரவாரத்தில் ஊதியந்தேட முயல்வதும், இன முயற்சிக்கும் முன்னேற்றத்திற்குமென்று எதையும் அடியூன்றச் செய்யாமல், ஆரியத்திற்கும் வடநாட்டுப் பூரியத்திற்கும் அடி பணிந்து கிடப்பதும் கொடுமை! கொடுமையிலும் கொடுமை!

இனி, எதிர்க்கட்சி - ஆளுங்கட்சி மூஞ்சி முகரைகள் இவ்வாறிருக்க, இனங்காப்பதற்கென்றே எழுந்த இயக்கமாகத் தன்னைக் கூறிக்கொள்ளும் இயக்கந்தான், இத் தமிழினத்திற்கு ஏதாவது பயனுள்ள செயல்களைத் திட்டமிட்டுச் செய்கின்றதா எனில், ஐயகோ பெரியார் தொடங்கிய அப்பெரும்பயன் இயக்கமும் வெறுஞ்செயல்களிலும் வீணான விளம்பரங்களிலுமன்றோ தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தலைதடு மாறி. பண வாணிக முதலாளிபோல் வருவாயைப் பெருக்கிக் கொண்டு வறிதான முயற்சிகளில் ஈடுபட்டுக் கால அழிவு செய்து கொண்டு வருகிறது.