பக்கம்:தமிழின எழுச்சி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 


மொழி, இன, நாட்டுக்குழைக்கும்
பொதுநலத் தொண்டர்களுக்கு!


இளைஞர்கள் தங்களின் இளமைத் துடிப்பாலும், அறிவெழுச்சியாலும், செயல் முனைப்பாலும், பொதுநல உணர்வுகளால் கவரப் பெற்றுத் தொண்டுக்கு வருகிறார்கள். வருகிறவர்களில் பலர் தங்கள் பெயர்களுக்கு விளம்பரத் தேடிகளாகவே இருக்கிறார்கள். சிலர் மிகு துடிப்போடு சிலகாலம் பொதுத்தொண்டில் ஈடுபடுகிறார்கள். ஆனால் சில நாள்களில் தங்களின் வேக உணர்ச்சிக்கேற்ற விளைவுகள் உடனே கிடைக்காமையால், ஆடுகளைப்போல் அங்கும் இங்கும் அலைந்து சிதறுகிறார்கள். அவர்களிடத்து நிலையான கொள்கைப்பிடிப்பு யிருப்பதில்லை; உறுதியான உணர்வுகள் இருப்பதில்லை. ஏதோ ஓர் உந்து வேகத்தால் நாமும் எதிலாவது ஈடுபடவேண்டுமென்று, ஏதோ ஒரு கவர்ச்சியான - ஆரவாரமுள்ள இயக்கத்தில் கால்வைக்கிறார்கள்: சிறிது காலம் சென்றபின்னர்; தாம் ஈடுபட்ட இயக்கத்தைப் பற்றியோ, அதில் உள்ளவர்களைப் பற்றியோ, அதை நடத்திச் செல்பவர்களைப் பற்றியோ, தமக்குப்பட்ட, சரியாகவோ, அல்லது தவறாகவோ, சில குறைகளைச் சொல்லிவிட்டு வேறோர் இயக்கத்தில் ஈடுபாடு கொள்கிறார்கள். பின்னர் அதிலிருந்து வேறொன்றுக்கு; பின் அதிலிருந்து மற்றொன்றுக்கென இடம் பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள். தங்கள் மனவுணர்வுக்கும் அறிவுணர்வுக்கும் செயல்நிலைக்கும் ஏற்ப, எதிலேயோ ஒன்றில் கால் ஊன்றுகிறார்கள். இறுதியில், அதிலும் நிறைவு பெறாமல் தாமே ஓர் இயக்கத்தைக் கட்டுகிறார்கள். சிலர் பொதுநிலையிலிருந்தே விலகிக்கொண்டு. இயல்பான வாழ்க்கையில்