பக்கம்:தமிழின எழுச்சி.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 203


இறுதியாக, எப்படியோ வெயில் புழுதிக்காய்ச்சலாகவாவது அடிக்க வேண்டும் என்பதே, இக்கால் உள்ள நிலை, ஆனால், பனிக்கட்டிக்கும் பற்றாத வெயில் என்பதாக நிலையிருக்குமானால் நாம் என்ன செய்வது? எழுஞாயிறு விழுஞாயிறாக இருப்பதை மேல் என்று கருத வேண்டியதுதான். அந்த நிலைக்குக் கலைஞர் தமிழினத்தையும் தமிழ்நாட்டையும் 'அம்போ' என்று விட்டு விடமாட்டார் என்றே நம்புகிறோம்! நம் நம்பிக்கையின் வெற்றி, கலைஞர் நம்மேல் வைக்கும் நம்பிக்கையைப் பொறுத்தது. அதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தென்மொழி சுவடி - 24, ஒலை - 10 பெப் - மார்ச்சு 1989