பக்கம்:தமிழின எழுச்சி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 23

எத்துணைப் போலியானது என்பதைக் காட்டப் போதுமான சான்றாகும். இது பற்றிக் கல்லூரி மேலாளர்கள் யாவரும் எண்ணிப் பார்க்க வேண்டுகின்றோம். மாணவர்களின் பள்ளி நிறுத்தங்களைப் பற்றியும், அதன் விளைவாக ஏற்பட்ட சலசலப்புகளைப் பற்றியும் ஆரவாரமான முறையில் வெளியிட்ட தமிழகச் செய்தித் தாள்களும், அம் மாணவர்கள் வெளியேற்றப் பெற்றதை எம்முறையிலாயினும் வெளியிடாமற்போனது கருதத் தக்கதும், கண்டிக்கத் தக்கதுமாகும். தமிழ்க்கெனப் போராடும் தமிழ்த் தலைவர்களும், தமிழ்த் தொண்டர்களும், அரசினருடன் தொடர்பு கொண்டு வெளியேற்றப்பெற்ற அம் மாணவர்களுக்கு அறம் வழங்குவார்களாக! இன்றேல் அவர்தம் போலித் தொண்டும், ஆரவாரப் பேச்சுகளும் பொய்பட்டுப் போகும் என்பதையும், அவர்களும் கால வட்டத்தில் இம் மாணவர்களை போன்றே அரசினரால் புறக்கணிக்கப்பட நேரிடும் என்பதையும் அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.

தென்மொழி சுவடி - 2 ஓலை - 9, அத்தோபர் 1964