பக்கம்:தமிழின எழுச்சி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 
வெறும் கருத்தரங்குகளால் இதுவரை
எந்தப் பயனும் விளைந்ததில்லை !


தஞ்சையில் கடந்த சிலை (சன 31.12.73) அன்று நடந்த தமிழன் பிறந்தகத் தீர்மானிப்பு கருத்தரங்கில் பெரும்புலவர் நீ. கந்தசாமியார் அவர்களின் தலைமையில், தென்மொழி ஆசிரியர் பெருஞ்சித்திரனார் ஆற்றிய சொற்பொழிவு:

  • தமிழன் வடநாட்டானுக்கு அடிமையாயிருக்கும்வரை, அவன் நம் கருத்துகளையும், நம் உரிமைகளையும் காதுகளிலேயே போட்டுக் கொள்ளமாட்டான்.
  • திண்ணையிலே இடம் கேட்டு உட்கார்ந்தவன் வீட்டையே தனக்குச் சொந்தம் என்பதா?
  • பாவாணர் போன்ற அறிஞர்கள் வேண்டுமானால் கருத்தரங்கை நம்பியிருக்கட்டும்; இளைஞர்கள் போராடித்தான் உரிமைகளைப் பெறமுடியும்.
  • நிலை இப்படியே போனால் தமிழன் என்றொருவன் இருக்கின்றானா என்று கேட்கப்படுகின்ற நிலை வந்தாலும் வரும்.
  • எனவே, இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டுமானால், தமிழகத்தை வடநாட்டான் ஆளுகையினின்று பிரித்தே ஆக வேண்டும்.