கணாடி
'சினைவளர் வேங்கை, கணவிரி
காந்தள், ... .......... வேய் பயில்
சோலை அருவி தூர்த்தர'
(பரி.11: 20-23)
சிவப்பு நிறம்
'கணவிரி மாலை
கைக்கொண்டென்ன - நிணநீடு
பெருங்குடர் கையகத்து ஏந்தி'
(மணி.5: 47-48)
(இ) கணவீரம் Kanaviram
(3) தண்மை, கடவுட்டன்மை, வழிபாடு
- cool, divinity, worship -
'சிறுபசு மஞ்சளொடு நறுவிரை
தெளித்து, பெருந்தண் கணவீர
நறுந்தண் மாலை துணை அற
அறுத்துத் தூங்க நாற்றி,
நளிமலைச் சிலம்பில் நல்நகர்
வாழ்த்தி ' (திருமுரு.235-238)
கணாடி Kanati (mirror)
(1) மங்கலம் - auspicious
'செங்கயல் இரட்டை திருவார் சுடர்
கணாடி பொங்குகொடி வார்முரசம்
தோட்டிபுணர் கும்பம் மங்கலங்கள்
எட்டுமிவை மணியிற்
புனைந்தேத்தி' (சீவக.2487: 1-3)
(ஆ) மண்டிலம் Mantilam
(2) தெளிவு
'கையகத்த் எடுத்துக் காண்போர்
முகத்தை மையறு மண்டிலம்
போலக் காட்ட' (மணி.25: 136-137)
கணிகை Kanikai (danseuse / courtesan)
(1) பொய்ம்மை - false
'ஆயத்து ஒருத்தி, அவளை, அவர்
காமம் மாயப் பொய் கூட்டி
மயக்கும் விலைக் கணிகை'
(பரி.20: 48-49)
கணிகைச் சிறுவன் Kanikaic ciruvan
(son of danseuse / courtesan)
(1) சிறப்பின்மை - insignificant
'சீர்சால் கணிகைச் சிறுவன்போல்
சிறப்பின்று அம்ம இது என்றான்'
(சீவக. 718: 4)
கணிச்சி
கணிச்சி Kanicci (Kuntali)
(1) கூர்மை - sharp
'சீறு அரு - முன்பினோன்
கணிச்சிபோல் கோடு சீஇ, ஏறு
தொழூஉப் புகுந்தனர்'
(கலி.101:8-9)
(2) அழிவு/இறப்பு - destruction/ death
'மடங்கலும், கணிச்சியும்,
காலனும், கூற்றும், தொடர்ந்து
செல் அமையத்துத் துவன்று உயிர்
உணீஇய' (கலி.105: 20-21)
(3) காமம் - lust
'காமக் கணிச்சியால் கையறவு
வட்டித்து' (பரி.10: 33)
(4) வலிமை - strength
'பரல் மண் சுவல முரண் நிலம்
உடைத்த வல் வாய்க் கணிச்சி'
(அகம்.21: 21-22)
கணிச்சி (மழுப்படை) Kanicci
(Maluppatai) (axe)
(1) அழிவு - destruction
'நீயே, மருந்து இல் கணிச்சி
வருந்த வட்டித்து' (புறம்.42: 22)
(2) கூர்மை - sharp
'கணிச்சிக் கூர்ம்படைக் கடுந் திறல்
ஒருவன்' (புறம்.195: 4)
(ஆ) மழு Malu |
அழிவு - destruction
மன்மருங்கு அறுத்த மழுவாள்
நெடியோன்' (அகம்.220: 5)
(3) பயன்பாடு - use
'மரம் கொல் - தச்சன் கைவல்
சிறாஅர் மழுவுடைக் காட்டகத்து
அற்றே - எத்திசைச் செலினும்,
அத்திசைச் சோறே'
(புறம்.206: 11-13)
(4) ஆற்றல்
'படைநவில் வெண்மழுவான்
பலபூதப் படையுடையான்
(திருஞான. தேவா.2559: 1)
(இ) குடாரி Kutari
அழிவு - destruction
'எரி கனன்று ஆனாக் குடாரி
கொண்டு - அவன் உருவு
திரித்திட்டோன்' (பரி.5:34-35)
72