குறடு
குறடு Kuratu (tongs)
(1) பொய்யான அன்பு - feigned love
'முட்டிகை போல முனியாது
வைகலும் கொட்டி உண்பாரும்
குறடுபோல் கைவிடுவர்'
(நாலடி.208: 1-2)
குறள் Kural - (smallness, dwarf)
(1) குறுமை / சிறுமை
'ஆயது அங்கு ஓர் குறள் உரு ஆய்
அடி' (கம்ப.சுந்.1189: 1)
(2) ஏமாற்று - deceive
'பொல்லாக் குறள் உருவாய்'
(நாலா,611: 1)
குறிஞ்சி Kuriici
(1) மலையகம் - mountainous tract
'சேயோன் மேய மைவரை
உலகமும்' (தொல்.951)
(2) கூதிர், யாமம் - winter, mid night
'குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார்
புலவர்' (தொல்.952)
பனிஎதிர் பருவம் - dew season
'பனி எதிர் பருவமும் உரித்தென
மொழிப்' (தொல்.953)
(3) புணர்தல் - love life
'புணர்தல் பிரிதல் இருத்தல்
இரங்கல் ஊடல் இவற்றின்
நிமித்தம் என்றிவை தேருங்காலை
திணைக்குரிப்பொருளே'
(தொல்.960)
(4) வெட்சிப்போர் / அச்சம் - war,
fear
'வெட்சிதானே குறிஞ்சியது புறனே
உட்கு வரத்தோன்றும் ஈர்ஏழ்
துறைத்தே' (தொல்.1002)
(5) அன்பு - love -
'கருங்கோற் குறிஞ்சிப் பூக்
கொண்டு பெருந்தேன் இழைக்கும்
நாடனொடு நட்பே ' (குறு.3: 3-4)
(6) சிறப்பு | அருமை - especial, rare
'கருங் காற் குறிஞ்சி மதன் இல்
வான் பூ' (நற்.268: 3)
(7) வீரம் - valour
'குறிஞ்சிக் குன்றவர் மறம் கெழு
வள்ளி தமர்' (பரி.9: 67)
குறிஞ்சி (பண்) Kuriici
கூகை
(1) இரவு / இன்பம்
'கழுது கால் கிளர ஊர்
மடிந்தன்றே உரு கெழு மரபின்
குறிஞ்சி பாடி' (நற்.255: 1-2)
குறும்பூழ் Kurumpul (a bird)
(1) பரத்தை
'குறும்பூழ்ப் போர் கண்டேம்;
அனைத்தல்லது, யாதும்
அறிந்ததோ இல்லை, நீ வேறு
ஓர்ப்பது' (கலி.95:6-7)
(2) சிறுமை - minimal, common
'யானை வேட்டுவன் யானையும்
பெறுமே; குறும்பூழ் வேட்டுவன்
வறுங் கையும் வருமே'
(புறம்.214: 4-5)
(3) தகுதியின்மை - unworthy
'காடுறை வாழ்க்கைக் கருவிளை
மாக்களை நாடுறைய நல்கினும்
நன்கொழுகார் - நாடொறும்
கையுள தாகி விடினும்
குறும்பூழ்க்குச் செய்யுள தாகு
மனம்' (பழமொழி.96)
குன்றி Kunri (a bead)
(1) சிவப்பு நிறம்
'குன்றி ஏய்க்கும் உடுக்கை'
(குறு.கட வா.3)
(2) சிறிய அளவு / சிறுமை
'உயர்ந்து ஏந்து மருப்பின்
கொல்களிறு பெறினும், தவிர்ந்து
விடு பரிசில் கொள்ளலென்;
உவந்து நீ இன்புற விடுதி ஆயின்,
சிறிது குன்றியும் கொள்வல், கூர்
வேற் குமண!' (புறம்.159: 22-25)
(3) வேடம் - feign
‘புறம் குன்றி கண்டனையரேனும்,
அகம் குன்றி மூக்கின் கரியார்
உடைத்து' (குறள்.277)
கூகை Kukai
(1) அறிவின்மை - foolish
'மாயத்தை அறிய மாட்டேன்
மையல்கொள் மனத்தனாகிப்
பேயொத்துக் கூகையானேன்
பிஞ்ஞகா பிறப்பொன்று இல்லீ'
(திருநா தேவா. 1512: 1-4)
111