சேறு
வளமை, விடியல், விவேகம்,
விழிப்புணர்வு; எதிர்ப்பு, கழிகாமம்,
தன்முனைப்பு; காட்டிக்கொடுத்தல்,
தீமையை விரட்டுதல்,
தூய்மைப்படுத்தல்,
சேறு Céru
(1) ஈரம் / குளிர்ச்சி
'தண் சேறு தாஅய், மதனுடை
நோன் தாள்
(நற். 8:7)
(2) வளம்
'ஆறு செல் வம்பலர் சேறு
கிளைத்து உண்ட' (அகம்.137:1)
(3) ஆபத்து
'ஆற்ற வினைசெய்தார் நிற்பப்
பலவுரைத்து ஆற்றாதார் வேந்தனை
நோவது- சேற்றுள் வழாமைக்
காத்தோம்பி வாங்கும் எருதாங்
கெழாமைச் சாக்கா டெழல்
(பழமொழி. 313)
(ஆ) அள்ளல் Allal
(4) துன்பம்
'கடும்புனல் தொகுத்த நடுங்கஞர்
அள்ளல்' (குறு. 103:1)
தீமை, பகை
'பகைக் கூழ் அள்ளல் பட்டு, மிகப்
பல் தீ நோய் தலைத்தலைத்
தருமே' (புறம். 185: 5-6)
(இ) அளறு Alaru
(6) நரகம்
'ஒருமைச் செயல் ஆற்றும் பேதை-
எழுமையும் தான் புக்கு அருந்தும்
அளறு' (குறள். 835)
(7) குருதி
'. .. .. .. பறியா நீள் இரும்
பனைமிசைப் பல பதினாயிரம்
குலை தரை உதிர்வபோல .. .. ..
-- .. .. .. .. .. அளறு சொரிபு.
நிலம் சோர' (பரி.2: 43-47)
(8) காம இன்பம்
'படுகடன் ஆதியில் பட்டது
நினையான் தொடுகழல் குருசில்
வடுவுரை நிற்ப இன்ப அளற்றுள்
இறங்கினன் ஆதலின் துன்பம்
துடைத்த தொழிலே போல'
(பெருங். இலா.9: 225-228)
துன்பம்
ஞமலி
கொழுங்களி அளற்றுள் வீழ்ந்தும்
கொழும்புகை மடுக்கப் பட்டும்'
(சீவக.2775.2)
(ஈ) தொளி Toli
(9) வளமை
'உழாஅ நுண்தொளி நிரவிய
வினைஞர் முடிநாறு அழுத்திய
நெடுநீர்ச் செறுவில் (பெரும்.211-
212)
(ஒப்பு) Mud, Marsh, swamp
வளமை, வளர்ச்சியின் தொடக்க
நிலை, இறப்பு, இருள், சுயநலம்,
மயக்கநிலை, வறுமை.
சேனை Cénai (army)
(1) மிகுதி - abundance
வீறுசால் வேந்தன் வினையும்
முடிந்தன; ஆறும் பதமினிய
ஆயின - ஏறொ(டு) அருமணி நாகம்
அனுங்கச் செருமன்னர்
சேனைபோல் செல்லும், மழை'
(கார்.20)
சோதமன் Cotaman (a person)
(1) நடுநிலைமை - neutral
சொரிதரு விசும்பில் சோதமன்
குறுகிப் பாத்தில் பெருமைப்
பரதன் முதலாச் சேய்த்தின்
வந்தநின் குலமும் செப்பமும்'
(பெருங். நர.3: 169: 171)
சோமகுண்டம் Comakuntam (a pond)
(2) மீயாற்றல், கடவுட்டன்மை -
supernatural power, divine
சோமகுண்டம் சூரிய குண்டம்
துறை மூழ்கிக் காமவேள்
கோட்டம் தொழுதார் கணவரொடு
தாம் இன்புறுவர் உலகத்துத்
தையலார்' (சிலப்.9: 59-61)
ஞ
ஞமலி Namali (dog)
(1) எளிமை - simple
'வன் கைக் கானவன் வெஞ் சிலை
வணக்கி ஊமிசைத் தவிர்த்த
139