தேள்
துயர்ப்படுக்கும் - நல்லாய் மணலுள்
முழுகி மறைந்து கிடக்கும்
நுணலும்தன் வாயால் கெடும்!'
(பழமொழி. 114)
(ஈ) கிணற்றுத்தவளை Kinarruttavalai
(5) அறியாமை - ignorance
'உணற்(கு) இனிய இன்னீர் பிறி(து)
உழிஇல் என்றும் கிணற்(று)
அகத்துத் தேரைபோல் ஆகார் -
கணக்கினை முற்றப் பகலும்
முனியா(து) இனிதோதிக் கற்றலிற்
கேட்டலே நன்று' (பழமொழி, 5)
தேள் Tel - scorpion
(1) காம வேட்கை - lust
'இடு தேள் மருந்தோ , நின்
வேட்கை ?' (கலி, 110:2-3)
(2) இடுதேனிடுதல் - false accuse
'பட்ட பதியிற் படாத
தொருவார்த்தை இட்டன ரூரா
ரிடுதேளிட் டென்றன்மேல்' (சிலப்.
9: 47-48)
(ஆ) தேள் எறிதல் Tel erital
(3) துன்பம் - affliction
'விடத் தேள் எறிந்தாலே போல
வேதனை ஆற்றவும் பட்டோம்'
(நாலா.529: 3-4)
(ஒப்பு) Scorpion ஆபத்து,
இகழ்ச்சி, கடும் பாறைகள்,
கழிகாமம், கழிவிரக்கம், கண்டனம்,
தற்கொலை, தீமை, துயருறுதல்,
தொல்லை, நெருப்பு, பாலைவனம்,
பாழ்நிலை, வறட்சி, நச்சுத்தன்மை.
தேன் Tén (honey)
(1) இனிமை - sweetness
'சாந்தில் தொடுத்த தீம் தேன்
போல' (நற். 1:4)
(2) நட்பு / அன்பு - friendship / love
'பெருந்தேன் இழைக்கும்
நாடனொடு நட்பே ' (குறு. 3:4)
(3) வேட்கை - strong desire
'பருவத் தேன் நசைஇப் பல்பறைத்
தொழுதி' (குறு. 175:1)
(4) விருப்பம் - desire
'யாமக்குறை ஊடல் இன் நசைத்
தேன்
தேன் நுகர்வோர்' (பரி. 10:32)
(5) காமம் - passion
'திருவில் திகழ் காமத் தேன் பருகித்
தேவர்' (சீவக.3141:3)
(6) இன்பம் - pleasure
'மையேர் குவளைக்கண் வண்டினம்
வாழும் செந்தாமரை வாய் எய்யேம்
எனினும் குடைந்தின்பத்
தேனுண்டு எழில் தருமே'
(திருக்கோ .7: 66.3-4)
(ஆ) பிரசம் Piracam
(5) இனிமை, சுவை - sweet, tasty
'பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்
பால்' (நற். 110:1)
(6) நறுமணம் - fragrance
'நாறு கொள் பிரசம் ஊறு நாடற்கு'
(நற். 268:5)
(7) களிப்பு - joy/exultation
'இருங் களிப் பிரசம் ஊத'
(நற். 311:10)
(இ) நறவு Naravu
(8) மகிழ்ச்சி - happiness
'நறவு மகிழ் இருக்கை நல் தேர்ப்
பெரியன்' (நற். 131:7)
(9) மயக்கம் - intoxication
'தேறுகள் நறவு உண்டார் மயக்கம்
போல்' (கலி, 147:2)
(10) வளமை - exuberance
'நறவு நொடை நெல்லின் நாள்
மகிழ் அயரும்' (அகம். 61:10)
களிப்பு
நறவு உண் மண்டை நுடக்கலின்,
இறவுக்களித்து பூட்டு அறு
வில்லின் கூட்டுமுதல் தெறிக்கும்'
(நற். 131:7)
இனிமை, களிப்பு
'இன்களி நறவின் இயல்தேர்
நன்னன்' (அகம். 178:16)
விருப்பம்
'நல் அமிழ்து ஆக, நீ நயந்து
உண்ணும் நறவே' (புறம். 125:8)
(ஈ) நறா Nara
மகிழ்ச்சி - joy
'ஒப்புரவினான் அறிப
சான்றாண்மை - மெய்க்கண்
மகிழான் அறிப நறா' (நான்.80:3-4)
167