நா
'விழைதக ஓங்கிய கழைதுஞ்சு
மருங்கின் கான் அமர் நன்னன்
போல, யான்ஆ குவல், நின்
நலம்தரு வேனே ' (அகம்.392: 26-28)
நா Na (tongue)
(1) சொல்திறம் - speech skill
'அமிழ்து பொதி செந்நா அஞ்ச
வந்த' (குறு.14: 1)
(2) சொன்னலம் - desirable words
'முது மொழி நீரா, புலன்நா
உழவர் புது மொழி கூட்டுண்ணும்'
(கலி.68: 4-5)
(3) சொல்வளம் - word power
'அரு மறை நாவின் அந்தணர்க்கு
ஆயினும்' (சிறுபா.204)
(4) சொல் - word / speech
'யாகாவார் ஆயினும் நா காக்க
காவாக்கால் சோகாப்பர் சொல்
இழுக்குப் பட்டு' (குறள். 127)
(5) உயிர்ப்பு / பேச்சு - alive, speech
'நாச்செற்று விக்குள்
மேல்வாராமுன் நல் வினை
மேற்சென்று செய்யப்படும்.'
(குறள். 335)
(6) சொல்வன்மை - mighty speech
'நா நலம் என்னும் நலன் உடைமை
அந் நலம் யா நலத்து உள்ளதூஉம்
அன்று ' (குறள். 641)
(ஒப்பு) Tongue இணங்குவித்தல்,
சுவை, சொல்லாற்றல், கொடூரம்,
தகுதிக் கேடான பேச்சு,
நிலையாமை, பழிச்சொல், பொய்.
நாகத்தின் ஆவி Nakattin avi (snakes'
hiss)
(1) துன்பம் - affliction, pain
'நாகப் பிள்ளை அங்கண் பிறந்த
ஆவி போல வைது வெய்துயிரா'
(பெருங்.உஞ்.46: 165-166)
நாகம் Nakam (நாகமரம்) (a tree)
(1) குறிஞ்சித்திணை - mountain tract
'நனைசினையன நகுவிரையன
நலனுடையன நாகம்' (நீலகேசி.16:
1)
நாமநீர் Namanir
நாவாய் கவிழ்த்த நாய்கன்
(1) நன்மை , புனிதம் - good, holy
'நலம்புரி பவித்திரம் ஆகு நாமநீர்'
(சூளா .417: 2)
நாய்களோடு சேர்ந்து நின்று
நரிக்கூட்டங்கள் ஊளையிடுதல்
Naykalbtu_cerntu ninru narikkuttankal
ulaiyitutal
(22) தீமை, இறப்பு, அழிவு - evil
omen
'ஞாளியோடு உளைக்கின்ற நரிக்
குலம்பலவால்' (கம்ப.ஆரண்.430: 4)
நாவல் கனி Naval kani (a fruit)
(1) தலைவி
பொங்கு திரை பொருத வார்
மணல் அடைகரைப் புன் கால்
நாவல் பொதிப் புற இருங்கனி'
(நற்.35: 1-2)
(2) வீண் - futile
'கற்றானும் கற்றர்வாய்க்
கேட்டானும் இல்லாதார் தெற்ற
உணரார் பொருள்களை - எற்றேல்
அறிவில்லான் மெய்தலைப் பாகு
பிறிதில்லை நாவல்கீழ்ப் பெற்ற
கனி' (பழமொழி.11)
(ஆ) நாவற்பழம் Navarpalam
(3) கருமை - black
பெருங்குலைப்பெண்ணைக்
கருங்கனி அனையதோர் இருங்கனி
நாவற் பழமொன் றேந்தி'
(மணி.17: 29-30)
(இ) வெண்ணாவல் Vennaval
(4) வெற்றி
வெண்ணாவல் அமர்ந்துறை
வேதியனை'
(திருஞான.தேவா.1156:1)
நாவாய் கவிழ்த்த நாய்கன் Navay
kaviltta naykan
(1) கவலை, கலக்கம், துன்பம் -
worry, anxiety, distress
'நாவாய் கவிழ்த்த நாய்கன் போல
ஓவா அவலமொடு காவலன்
கலங்கிப் பண்ணமை நல்லியாழ்
179