அருவி
(2) மிகுதி, பெருக்கம் - excess,
increase
'நயம் பெரிது உடைமையின்
தாங்கல் செல்லாது, கண்ணீர்
அருவியாக அழுமே, தோழி!'
(நற்.88:7-9)
(3) தூய்மைப்படுத்தல் - purification
'கல் மிசை அருவியின் கழூஉஞ்
சாரல்' (நற்.151:4)
(4) விரைவு - speed
'குன்றுஇழி அருவியின் வெண்தேர்
முடுக'(குறு.189:2)
(5) தூய்மை - pure
' .. .. ... பாம்பின் தூங்குதோல்
கடுக்கும் தூவெள் அருவி'
(குறு.235:1-2)
(6) வளமை - prosperous
'மைபடு சிலம்பின் ஐவனம் வித்தி
அருவியின் விளைக்கும்
நாடனொடு' (குறு.371:2-3)
(7) உயர்வு - high
'மாஅல் அருவித் தண் பெருஞ்
சிலம்ப!' (ஐங்.238:3)
(8) அழகு - beauty
'வாள் வனப்பு உற்ற அருவி'
(ஐங்.312:3)
(9) அசைவு, இயக்கம் - movement,
action
'வரை மிசை இழிதரும்
அருவியின் மாடத்து வளி முனை
அவிர்வரும் கொடி நுடங்கு
தெருவில்' (பதி.47:3-4)
(10) வளம் - wealth
'நெறி நீர்அருவி அசும்பு உறு
செல்வம்' (பரி.8:128)
(11) தன்மை - cool
'காதலர் - எயிறு ஏய்க்கும் தண்
அருவி நறு முல்லை' (கலி.32:16)
(12) உயர்வு / சிறப்பு - high /
excellence
'இலங்கும் அருவித்து: இலங்கும்
அருவித்தே : வானின் இலங்கும்
அருவித்தே' (கலி.41:18-19)
(ஆ) அருவி ஒலித்தல் Aruvi
olittal (resounding waterfall)
(13) மகிழ்தல் - enjoyable
'நெடு நீர் அருவிய கடும் பாட்டு
ஆங்கண்: பிணி முதல் அரைய
பெருங் கல் வாழைக் கொழு முதல்
அலவனை அன்னம் அருளல்
ஆய் கனி மந்தி கவரும் நல் மலை
நாடனை நயவா,யாம்,அவன் நனி
பேர் அன்பின், நின் குரல் ஒப்பி,
நிற் புறங்காத்தலும் காண்போய்,
நீ?' (நற்.251:1-6)
(இ) அருவியாடுதல் Aruviyatutal
(bathe in the waterfall)
(14) இன்பம், இனிமை, மகிழ்ச்சி -
pleasure, sweetness, happyness
'ஆர்கலி வெற்பன் மார்பு
புணைஆக, கோடுஉயர்
நெடுவரைக் கவாஅன் பகலே,
பாடுஇன் அருவி ஆடுதல் இனிதே'
(குறு.353:1-3)
(15) புத்துணர்ச்சி - freshness
'விண் தோய் வரை, பந்து எறிந்த
அயா வீட, தண் தாழ் அருவி,
அரமகளிர் ஆடுபவே'
(கலி.40:22-23)
(ஒப்பு) Waterfall தொடர்
இயக்கநிலை: நிலையாமை.
அரைத்த மஞ்சள் Araitta mancal
(1) அழிதல் - perish
'நரைப்பு மூப்பொடு பிணிவரும்
இன்னே நன்றி இவ்வினையே
துணிந்து எய்த்தேன் அரைத்த
மஞ்சள் அதாவதை அறிந்தேன்
அஞ்சினேன் நமரானவர் தம்மை'
(சுந்.தேவா.185:1-4)
மே.காண். 'மஞ்சள்'
அரைமரம் Araimaram(pipal tree)
(1) பௌத்த சமயம் - Buddhism
'முழுத்தாளதாய்ப் பள்ளி
முற்றத்தோர் அரைமரத்தின்
குழுக்கொம்பர் பிடித்தொருகாற்
குஞ்சித்து நின்றுதான்'
(நீலகேசி.269:3-4)
அலவன் (crab) பார். 'களவன்'
அலவன் அன்னம் அருளல்
Alavanai annam arulal
(1) நன்மை - goodness