எறும்பிடை நாங்கூழ்
'நுண் பல் ஏறும்பி கொண்டு
அளைச் செறித்த வித்தா வல்சி,
வீங்கு சிலை, மறவர் பல் ஊழ்
புக்குப் பயன் நிரை கவர'
(அகம்.377:3-5)
(ஆ) எறும்பு Erumpu
(2) முன்னறிதிறம், நுட்பம்
anticipation, subtle, minute
'பொய்யா எழிலி பெய்விடம்
நோக்கி, முட்டை கொண்டு வன்
புலம் சேரும் சிறு நுண்
எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப'
(புறம்.173:5-7)
(3) பேதைமை, வீண்முயற்சி - foolish,
futile
'ஆகாது எனினும் அகத்துநெய்
உண்டாகின் போகாது எறும்பு
புறம்சுற்றும் - யாதும் கோடாஅர்
எனினும் உடையாரைப் பற்றி
விடாஅர் உலகத்து அவர்'
(நாலடி.337)
(4) ஆக்கம், செயல் - active
'நந்தெறும்பு தூக்கணம் புள்காக்கை
என்றிவைபோல் தம்கருமம் நல்ல
கடைப்பிடித்து' (ஆசார.100:1-2)
(இ) உறவி Uravi
(5) உறுதியின்மை / வலுவின்மை - weak
'ஆள்வினைக்கு எழுந்த
அசைவுஇல் உள்ளத்து ஆண்மை
வாங்க, காமம் தட்ப, அகைபடு
நெஞ்சம்! கண்கண் அகைய,
இருதலைக் கொள்ளி இடைநின்று
வருந்தி, ஒருதலைப் படாஅ உறவி
போன்றனம்' (அகம்.339:6-10)
(ஒப்பு) Ant அடக்கம்,
அறிவாற்றல்,இயல்புணர்ச்சி,கடும்
உழைப்பு, சீரான தன்மை,
செயலறிவு, பணிவு, புத்திகூர்மை,
பெருக்கத்தன்மை, வரிசைமுறை,
வலிமை, குறுகிய மனப்பான்மை,
பொறாமை, வலுவற்ற இயல்பு.
எறும்பிடை நாங்கூழ் Erumpitai nankul
(1) துன்பம் - trouble
'எறும்பிடை நாங்கூழ் எனப்
புலனால் அரிப்புண்டு அலந்த
ஏர்
வெறுந் தமியேனை விடுதி
கண்டாய்' (திருவா.6:25.1-3)
எறும்பு (ant) பார். 'எறும்பி'
எறுழ் Erul (a red flower)
(1) நன்மை / இன்பம்
goodness / pleasure
'வரு மழைக்கு எதிரிய மணி நிற
இரும் புதல் நறை நிறம் படுத்த நல்
இணர்த் தெறுழ் வீ' (நற்.302:4-5)
என்பு Enpu (bone)
(1) நெகிழ்ச்சி - melt
'உருகுபவை போல் என்பு, குளிர்
கொளீஇ' (பொரு.78)
(2) வலிமை - strength
'உரிவை தைஇய ஊன்கெடு
மார்பின் என்புஎழுந்து இயங்கும்
யாக்கையர்' (திருமுரு.129-130)
(3) அன்பு - love
'என்பி லதனை வெயில் போலக்
காயுமே அன்பி லதனை அறம்'
(குறள்.77)
(4) வறுமை - poverty
'உடும்பு உரித்தன்ன என்பு எழு
மருங்கின் கடும்பின் கடும் பசி
களையுநர்க் காணாது'
(புறம்.68:1-2)
(ஒப்பு) Bone அழிவின்மை,
ஆதாரம், உறுதி, சிறந்த பண்பு,
மீட்பு, வலிமை, வாழ்க்கை;
இறப்பு.
ஏ
ஏர் Er (plough)
(1) உழைப்பு - hard work
'கல் அறுத்து இயற்றிய வல்உவர்க்
கூவல், வில் ஏர் வாழ்க்கை, சீறூர்
மதவலி நனி நல் கூர்ந்தனன்
ஆயினும்' (புறம்.331:1-3)
(2) வீரம் / மறம் - bravery
'இரைமுரசு ஆர்க்கும் உரைசால்
பாசறை, வில்ஏர் உழவின்நின்
நல்இசை உள்ளி' (புறம்.371:12-13)
(3) புலமை - poetic ability