கங்கை
(ஐ) இரவு வானவில் தோன்றுதல்
Iravu vanavil tonnutal
(18) தீமை , அழிவு - evil omen
'இடுங்கொடி வில்லிர வெம்பகல்
வீழும் கடுங்கதிர் மீனிவை
காண்பென் காணெல்லா'
(சிலப்.20: 6-7) |
(ஒப்பு) Night, Midnight இரகசியம்,
உறக்கம், கருமை, கருவில்
இருக்கும் நிலை, கனவு, கேட்டல்,
செழுமை, தனிமைநிலை, நட்பு,
நிலைபேறு, பெண்ணியல்பு,
மயக்கநிலை; அறிவிழந்த நிலை,
இருள், இறப்பு, கீழுலகம்,
சதித்திட்டம், சிக்கல், சூது, தீமை,
தீய எண்ணங்கள், துன்பமேற்கிற
நிலை, தெளிவற்ற நிலை,
தொந்தரவு, பில்லி சூனியம்.
கங்கை Kankai (Ganga)
(1) காமப் பெருக்கு - flooding passion
'வாஅன் இழிதரும் வயங்கு வெள்
அருவிக் கங்கைஅம பேர் யாற்றுக்
கரை இறந்து இழிதரும் சிறை அடு
கடும் புனல் அன்ன, என் நிரை
அடு காமம் நீந்துமாறே'
(நற்.369:8-11)
(2) மேன்மை / உயர்வு - superiority
'மீன் ஆரம் பூத்த வியன் கங்கை
நந்திய வானம் பெயர்ந்த மருங்கு
ஒத்தல்' (பரி.16:36-37)
(3) செவ்வி / நிறைவு - perfectness,
fullness
'வளமழை மாறிய என்றூழ்க்
காலை, மன்பதை எல்லாம் சென்று
உண, கங்கைக் கரை பொரு மலி
நீர் நிறைந்து தோன்றியாங்கு,
எமக்கும் பிறர்க்கும் செம்மலை
ஆகலின்' (புறம்.161:5-8)
(4) வளமை - prosperity
'இமையவர் உறையும் சிமையச்
செவ்வரை, வெண்திரை கிழித்த,
விளங்குசுடர் நெடுங்கோட்டுப்
பொன்கொழித்து இழிதரும்
போக்குஅருங் கங்கைப் பெருநீர்
போகும் இரியல் மாக்கள்'
(பெரும்.429-432)
(5) களவு - conjugal love
கங்கை
'திங்கள்மாலை வெண்குடையான்
சென்னி செங்கோலது ஓச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி'
(சிலப்.7.2)
(6) விரைவு - speed, swift
'கடுவரல் கங்கைப் புனலாடிப்
போந்த' (சிலப்.29: 2.3)
(7) கடவுட்டன்மை , புனிதம் - divine,
holy |
'கங்கை என்னும் கடவுள் திரு நதி'
(கம்ப. அயோ .619: 1)
(8) தூய்மை - purity
'தூ நறுஞ்சடைக் கங்கைநீர்
தோய்ந்து வந்தாரோ' (பெரிய.518:
5-6)
(9) விரிவு - spreading -
'சுரும்பிவர் சந்தும் தொடுகடன்
முத்தும் வெண் சங்குமெங்கும்
விரும்பினர் 'பாற்சென்று
மெய்க்கணியாம் வியன்
கங்கையென்னும்' (திருக்கோ. 16:
248. 1-2)
(10) மங்கலம் - auspicious
'கங்கையின் களிற்றின் உச்சிக்
கதிர்மணிக் குடத்தில் தந்த மங்கல
வாச நன்னீர் - மணிநிறங்
கழீ இயது ஒப்ப' (சீவக.623: 1-2)
புனிதம் - holy
'பெரு நீர்த் திரை எழு
கங்கையிலும் பெரியதோர் தீர்த்த
பலம் தருநீர்ச் சிறுச்சண்ணம்
துள்ளம் சோரத் தளர்நடை
நடவானோ ' (நாலா .95: 5-8)
(ஆ) கங்கைப் புனலாடல்
Kankaip punalital
தூய்மை - purification
'கடுவரல் கங்கைப் புனலாடிப்
போந்த' (சிலப்.29:2.3)
(இ) கங்கையாடல் Kaikaiyatal
(11) தூய்மை, பாவம் தொலைத்தல் /
புண்ணியம் - removing sin
'மணிமேகலையை வான்
துயருறுக்கும் கணிகையர் கோலம்
காணாது ஒழிகெனக் கோதைத்
தாமம் குழலொடு களைந்து
போதித் தானம் புரிந்து அறம்
கொள்ளவும் என்வாய்க் கேட்டோர்
64