பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

101


இந்தப் போக்கு ஞானரதம், கசடதபற போன்ற சிறு பத்திரிகைகளில் காணப்பட்டதைவிட அதிகமாகவே பிரக்ஞை இதழ்களில் தடம் பதித்துள்ளது. பின்னர் ஆரம்பித்த பல சிறு பத்திரிகைகள் இதைப் பின்பற்ற வேண்டிய ஒரு ஃபாஷன் ஆக மதித்து-இப்படி தமிழும் இங்கிலீஷும் கலந்து கலந்து எழுதாவிட்டால் மற்றவர்கள் தங்களை அறிவு ஜீவிகள் என்று மதிக்கமாட்டார்கள் என்று எண்ணியும்- இதைக் கையாள்வதில் சந்தோஷமும் பெருமையும் கொண்டார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

பிரக்ஞை 'அறிவார்ந்த தன்மையோடு' கலை, ஓவியம், சினிமா பற்றிய கட்டுரைகளையும் கருத்துக்களையும் வெளியிட்டது. சினிமா விமர்சனங்கள், அரசியல் சமூகப் பார்வையோடு அழுத்தமாகவும் விரிவாகவும் எழுதப்பட்டன. சத்யஜித்ரே, பதல் சர்க்கார், ஷ்யாம் பெனகல், மிருணாள் ஸென் முதலியோரின் படங்கள் பற்றிய கட்டுரைகள் பிரசுரமாயின. ஓவியக் கலைஞர்கள், அவர்களுடைய படைப்புகள் சம்பந்தமான கட்டுரைகளையும் பிரக்ஞை வெளியிட்டது.

புதுரகக் கதைகள், புதுக் கவிதைகள், கவிதைத் தொகுப்புகள் பற்றிய காரசாரமான விமர்சனங்கள் பிரக்ஞையில் அடிக்கடி பிரசுரமாயின. சில நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் பற்றிய விரிவான மதிப்புரைகளும் வந்துள்ளன. 4 வது இதழில் ஞானக்கூத்தன் கலந்துரையாடல்'-12 பக்கங்கள்-கவிதை பற்றிய அவருடைய கருத்துக்களை விளக்கியது.

7 வது இதழ் கவிதைச் சிறப்பிதழ் ஆக வெளிவந்தது. ஞானக் கூத்தன், ஹரி. ஸ்ரீனிவாசன், மாலன், பிரபஞ்சகவி, பகவய்யா, நா. விச்வநாதன், தேவதேவன், ஆத்மாநாம், தஞ்சாவூர் கவிராயர், மணிகண்டன் கவிதைகள் எழுதியுள்ளனர். மூன்று மலையாளக் கவிதைகளை நகுலன் தமிழாக்கினார். மற்றும் செக் மொழிக் கவிதை, டி. எஸ். எலியட் கவிதைகளும் தமிழில் தரப்பட்டன. 'மார்க்ஸியமும் பஜனைக் கவிஞர்களும்' என்ற தலைப்பில் முற்போக்குக் கவிஞர்களின் தன்மைகள் குறித்து விரிவான கட்டுரை ஒன்றும் பிரசுரமாயிற்று.

'மார்க்லிசமும் இலக்கிய விமர்சகனும்’- ஜ்யார்ஜ் ஸ்டைனர் எழுதியது. மொழிபெயர்க்கப்பட்டு தொடர் கட்டுரையாக வெளிவந்துள்ளது. ஆல்பர்ட் கேமு நாடகம் 'நியாயவாதிகள்' தொடர் அம்சமாக வந்தது.

இரண்டாம் ஆண்டின் ஆரம்பத்தில், தங்கள் ஓராண்டு சாதனை