110
வல்லிக்கண்ணன்
உந்தியெழுந்து, புதுமையாகிய விண்ணில் சிறகுகள் சிலிர்க்கப் பறக்கும் ஒளிப்பறவைகள் இருக்கலாம்.
ஆனால் அந்தப் பறவைகள், மண்ணாகி - மண்ணுக்குள் மறையாமல், தூசாகி - விண்ணுக்குள் கலவாமல், இருளையழித்து, வழியையமைத்து, பகலை அழைக்கும் பறவைகளாகவே இருக்கும்.
இந்தப் பறவைகளுள் , காதல் கீதமிசைக்கும் இளங்குயில்கள் இருக்கலாம். ஆனால் அந்தக் கீதங்கள், மனித ஜீவியத்தின் பொருளுணர்ந்து புணரும் சுதந்திர கீதங்களாகவே இருக்கும்.
இந்தப் பறவைகளுள், யுகயுகங்களாக மனித வாழ்வையும், சமூக தர்மங்களையும் தம் விஷ நாக்குகளால் தீண்டி உயிர் உறிஞ்சிவரும் நாகங்களுக்குக் கல்லறைகள் அமைக்கும் சுருடப் பறவைகள் இருக்கலாம்.
ஆனால் அந்தக் கருடன்களால், எந்தக் குஞ்சுகுளுவான்களுக்கும் ஆபத்தில்லை. புரையோடிப் போய்விட்ட சமூகத்தின் புன்மைகளை மட்டுமே சுட்டெரிக்கும் கருடன்களாகவே இருக்கும்.
மலரப் போகின்ற ஒளிமயமானதொரு பொற்காலக் கனவுகளிலேயே மூழ்கிப் போகாமல், அரும்பிக் கொண்டிருக்கும் புதுயுகத்தின் ஆசார வாசலிலே பூபாளம் பாடிக்கொண்டிருக்கும் வானம்பாடியை இனி மாதந் தோறும் காணுவீர்கள்'
நீண்ட தலையங்கத்தின் சில பகுதிகள் இவை, தலையங்கத்தின் அடியில் 'முல்லை ஆதவன்', 'பாலை நிலவன்' என்ற பெயர்கள் அச்சாகியிருந்தன.
இந்தத் தன்னம்பிக்கை குரலுக்கு ஊக்கம் தரும் எக்காளமாக அமைந்திருந்தது மு. மேத்தாவின் அந்த மனிதாபிமானக் கவிதையை.. என்ற படைப்பு .
‘வைகறைப் போதுக்கு
வார்த்தை தவமிருக்கும்
வானம்பாடிகளே - ஒ
வானம்பாடிகளே!
இந்த
பூமி உருண்டையைப்
புரட்டி விடக்கூடிய