பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

131


சுவடு 6-வது இதழில் சுயவிமர்சன அறிவிப்பு ஒன்று வெளி வந்தது.

“மாத இதழாக மலர்ந்து இடையில் 'இரு மாதம் ஒருமுறை' என மாறி ஆண்டு நிறைவை எய்தவிருக்கிறது! இந்த ஆறு இதழ்களில் பெரிதாக ஒன்றும் சாதித்துவிடவில்லை என்பதை அறிவோம். ஆனால் இனி வரும் நாட்களில் நிறையச் சாதிப்பதற்குரிய பயிற்சியும் அனுபவமும் இக்குறுகிய காலத்திலேயே சுவட்டிற்குக் கிட்டியிருக்கிறது. சுவடு ஒரு பொது மேடை என்ற எங்கள் முதல் இதழ் பிரகடனத்திற்கேற்ப இன்றைய தமிழ் இலக்கியத்தின் சகல கருத்துக்களும் சந்திக்கும் ஒரு களம் என்பதை மெய்ப்பிக்க ஓரளவு முயன்றுள்ளோம். மாற்றுக் கருத்துக்களை முகம் கொடுத்து சந்திக்கவே விரும்பாமல் ஒரு சேணம் பொருத்திய பார்வையுடன் சிறு பத்திரிகைகள் விளங்கியபோது, அனைவரும் அரங்கேறலாம் எனச் சுவடு அழைப்பு விட்டது. 'இது அவர் ஏறிய மேடை நான் மாட்டேன்’ என்று ஓடிப் போகிறவர்களும் இல்லாமல் இல்லை. ‘இது எது, எந்த குரூப் என்று இன்னும் புலப்படவில்லையே' என்று சொல்லிக்கொண்டு இன்னும் காத்துக் கொண்டிருப்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். இவர்களுக்கிடையில் சுவடு பக்கங்களில் வந்து கலந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும், சுவடுமீது ஆர்வமும் அக்கறையும் கொண்டு சந்தாக்களும் படைப்புகளும் அனுப்பி வரும் அன்பர்களுக்கும் சுவடு பிரியமுடன் தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.”

மேலும் சில வரிகளுக்குப் பிறகு தனது எதிர்காலத் திட்டம் பற்றியும் அது கூறியது-

“புதியவர்களுக்கு நிறைய உற்சாகம் தரப்படும். உற்சாகமிழக்காத பழையவர்களின் படைப்புகளும் இடம் பெறும். குறிப்பாகத் தமிழ் நவீன நாடியாக சுவடு விளங்க முயற்சி செய்யும். புதிய தமிழ் எழுத்தின் போக்கிற்கும் நோக்கிற்கும் வெளித்தடைகள் வணிக ரீதியில் இயங்கிக் கொண்டிருக்கும்போது சுவடு போன்ற ஒரு இலக்கிய இதழுக்கு ஆதரவளிக்கவேண்டிய தார்மீகக் கடமை தமிழ் இலக்கியத்தின்மீது அக்கறையுள்ள எங்களுக்கும் உண்டு. இதில் உங்கள் பங்கையும் செலுத் துங்கள்.”

சுவடு ‘ஆனந்தவிகடன்' அளவில் வந்தது. ஆரம்பத்தில் 24 பக்கங்களும், பின்னர் 32 பக்கங்களும் கொண்டிருந்தது.