186
வல்லிக்கண்ணன்
சூ என் லாய்— இவை போன்ற விஷயங்களே தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.
‘படைப்பு வேறு, படைப்பாளி வேறு'— (படைப்புகளில் வெளிப்படுத்துகிற வகைகளிலேயே படைப்பாளியின் வாழ்க்கை முறைகளும் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை) என்ற கருத்தின் மீது மோதல்கள் ஏற்பட இ. வெ. வ. களம் அமைத்துக் கொடுத்தது.
இக் கருத்தை வலியுறுத்தும் விதத்தில் தமிழவன் ‘கண்ணீர் மறைந்துவிடும். கவிதை மறையாது' என்றொரு கட்டுரை எழுதினார்.
‘வார்த்தைக்கு உயிர் கொடுக்கும் வாழ்க்கை' என்ற தலைப்பில், நிவேதித்தா எதிர்ப்புத் தெரிவித்து விரிவாக எழுதினார்.
'தான்—படைப்பு—தமிழவன்' எண்ணங்களை ஆய்வு செய்து சில விளக்கங்கள் தந்திருக்கிறார் ஞானி.
தமிழவன் தனது கருத்தை வலியுறுத்தி 'பாம்பு செத்துப் போயிற்று’ என்றொரு கட்டுரை எழுதினார்.
விவாத முடிவில், இருதரப்பு அபிப்பிராயங்களையும் சீர்தூக்கிப் பார்த்து 'ஸம்மிங் அப்' செய்துள்ளார், எஸ். வி. ராஜதுரை.
பயனுள்ள—சிந்தனைச் செறிவுள்ள கட்டுரைகள் இவை.
அதேபோல, 'மார்க்சியமும் கிறித்துவமும்' என்ற எஸ். வி. ராஜதுரையின் 17 பக்கக் கட்டுரையும் குறிப்பிடத்தகுந்தது.
‘இந்திய, கிரேக்க தத்துவ மரபுகள்—சில பிரச்னைகள் என்ற தலைப்பில், சாரு நிவேதிதா, வெ. சாமிநாதன் சிந்தனைகளை விவாதத்துக்கு எடுத்துக்கொண்டு விரிவான மறுப்புரை எழுதியதும் கவனிப்புக்கு உரியது.
‘வண்ணநிலவனுடன் உரையாடல்' வல்லிக்கண்ணனிடம் சில கேள்விகள், மற்றும் வண்ணநிலவனின் 'பாம்பும் பிடாரனும்' சிறுகதைத் தொகுப்புப் பற்றிய சந்திரமூலரசன் எழுதிய 'வீம்புள்ள பிரக்ஞை'—
'நமது இலக்கு—அதற்கான செயல்பாடுகள்- ந. முத்துசாமி, ஜெனக ப்ரியா கட்டுரை.