பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260


உண்மையான கவிதைகளை இளைஞர்களுக்குக் கொடுக்கக் கூடும்.‘

கவிதையின் நலனுக்கான இத்தகைய கருத்துக்களையும் ‘ழ’ முன் வைத்தது. அது தொடர்ந்து வந்திருந்தால், கவிதையில் சோதனைகளையும் சாதனைகளையும் கணிசமான அளவில் புரிந்திருக்கக் கூடும் என்ற எண்ணத்தை ‘ழ’ வின் இதழ்கள் தருகின்றன.

‘ழ’ முதல் இதழ் 1978 மாதம் வெளிவந்தது. அதன் 24 -ம் இதழ் 1983 ஜனவரியில் வந்தது.

கவனம்- இலக்கியத் தரமான கவிதை, கட்டுரை முதலியவற்றைப் பிரசுரிப்பதற்காக 1981 மார்ச்சில் தோன்றிய சிற்றேடு. ஆசிரியர் ஞானக் கூத்தன்.

‘பத்திரிகை என்ற சாதனம் படைப்பிலக்கியத்தைச் சேர்த்து இன்னும் பிற துறைகளையும் கவனிக்கக் கூடியது. சிற்றேடுகள் இன்னமும் இலக்கியத்தையே குறியாகக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்த போதிலும்கூட, கருத்துக்களைக் கொண்டு செல்லும் சாதனம் என்ற அளவில் பிற துறை நிகழ்வுகளை அறிந்து கொள்ள வேண்டுவது அவசியமாகும். இந்த முறையில் நவீன ஓவியம் சிற்றேட்டியக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. இவ்வாறே இதர துறைகளும் பங்கு பற்றும்பொழுது இந்த நூற்றாண்டின் புதிய தமிழ்ப் பத்திரிகையின் உருவம் முழுமையாகப் பிடிபடும். ஏனென்றால் முழுமையான பத்திரிகை என்பது ஒரு துறையின் நஷ்டத்துக்குக் கிடைப்பதாகாது. முழுமையான பத்திரிகை பலதுறைகளைக் கவரக் கூடியதானாலும், அதனாலேயே ஒரு துறைக்குப் பிரத்யேகமான பத்திரிகை வேண்டுவதன் அவசியத்தைப் போக்கிவிடாது. எந்தத் துறையோடும் அளவளாவும் இலக்கியம் படைப்பிலக்கியத்தோடு சிற்றேட்டில் சேர்க்கப்படலாம். இன்றைய சிற்றேடுகள் படைப்பிலக்கியத்தாரால் நடத்தப்படுவதால், இலக்கியமே முதன்மை பெறுவது தவிர்க்க முடியாதது. ஆனால் இந்த மூளைக்களத்தில் இதர கலைகள் வேண்டப்படாதவை அல்ல. அவை மகிழ்ச்சியுடன் உள்ளே இழுத்துக் கொள்ளப்பட வேண்டிய உறவுகள்.‘

கவனம் முதலாவது இதழ் தலையங்கத்தின் கடைசிப் பகுதி இது.

தனித்தன்மை கொண்ட கவிதைகள், கதைகள், கட்டுரைகளை