பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

286

வல்லிக்கண்ணன்


‘’மல்லிகை அவரது ‘சொந்தப் பத்திரிகை’ என்றபோதிலும்—அதனால் ஏற்படும் பொருளாதார லாப நஷ்டங்களுக்கு அவரே பொறுப்பு என்ற போதிலும்—மல்லிகையை மக்கள் உடைமை என்றே ஜீவா கருதுகிறார். இதற்குக் காரணம், மார்க்ஸியம் லெனினியத்திலும் அதன் செயல்பாட்டிலும் அவர் கொண்டுள்ள பற்றும் உறுதியும் ஆகும்.

மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் கொள்கைப் பிடிப்பு, அவர் உழைப்பு, பொறுமை, விவேகம், பெருந்தன்மை, தோழமை உணர்ச்சி, நாட்டுப்பற்று, மொழிப்பற்று இவையும் மல்லிகையின் வெற்றிக்கு அடிப்படைக் காரணங்களாகும்.” (தி. க. சி. }

மல்லிகை ஆசிரியரின் உழைப்பையும் சாதனையையும், மல்லிகையின் வளர்ச்சி மூலம் நன்குணர்ந்த வாசகர்கள் வியந்து பாராட்டத் தவறுவதில்லை.

‘ஒரு சஞ்சிகை தனது இருபதாவது ஆண்டு விழாவை ஈழத்தில் கொண்டாடுகிறது என்ற யதார்த்தமான செய்தியே ஒரு சரித்திரமாகும். இந்தச் சாதனையைச் செய்வதற்கு நீங்கள் அதற்குப் பாத்தி கட்டிப் பசளையிட்டு உழைத்த உழைப்பை இலக்கிய உலகம் லேசில் மறந்துவிட முடியாது. அத்தனை உழைப்பு உழைத்துள்ளீர்கள். நானறிந்த வரை இத்தனை சிரமமான உழைப்பை உங்களைத் தவிர வேறு எவருமே தங்களது சஞ்சிகைக்கு செய்திருக்க முடியாது. ஒரு இலட்சிய வெறியும் தாகமும் இடைவிடாத நல்நோக்கமும் இருந்திருந்தால்தான் இது சாத்தியப்படும் என நான் நம்புகிறேன்’ என்று கொழும்பு வாசகர் எஸ். ரவீந்திரன் பாராட்டியிருக்கிறார்.

‘மனக் கிலேசமில்லாமல் துணிவாகவும் திட்டமிட்டும் சுயநலமற்றும் எவர் ஒரு காரியத்தைச் செய்தாலும் அது காலக் கிரமத்தில் மக்களால் மதித்துப் போற்றி வரவேற்கப்படும்.‘

‘யாழ்ப்பாணத்தில் இப்பொழுது உள்ள வேறு எவருக்கும் இந்தப் பராக்கிரமத்தை அடைய இயலாது. அதற்கு முக்கிய ஏதுவாக நான் கருதுவது, உங்களுடைய சுயநலமற்ற துணிவுதான்.’

இப்படியும் இன்னும் பலவாறாகவும், மல்லிகை ஆசிரியரைப் பாராட்டி ஊக்குவிக்கிறார்கள் வாசகர்கள்.

டொமினிக் ஜீவாவின் மன உறுதிக்கும், துணிச்சலுக்கும், அயராத