பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9. சாந்தி



லட்சிய வேகத்தோடும் மிகுந்த நம்பிக்கையுடனும் பிறந்த மற்றுமொரு இலக்கியப் பத்திரிகை ‘சாந்தி'.

இது தலைநகரமான சென்னையிலிருந்து வெளிவரவில்லை. திருநெல்வேலியில் தோன்றியது. இதை ஆரம்பித்து நடத்தியவர் தொ. மு. சி. ரகுநாதன்.

ரகுநாதன் பத்திரிகை ஆசிரியராகச் சென்னையில் பல வருஷ அனுபவம் பெற்றிருந்தார். முதலில் 'முல்லை' என்ற 'மாதம் ஒரு புத்தக'த்தின் ஆசிரியராக இருந்தார்.

அப்போது அவருடைய இலக்கிய நோக்கும் கொள்கைகளும் வேறாக இருந்தன. 'முல்லை'யில் வந்த கதைகளும், கட்டுரைகளும் புத்தக மதிப்புரைகளும், வர்ணச் சித்திரங்களும் ரகுநாதனின் முதல் கால கட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப இருந்தன.

“இலக்கியத்தில் புதுமையும் தனிமையும் உண்டாக்க விரும்புபவர்களுக்கு ஒரு நற்சகுனம், நம்பிக்கை” என்று கொடிவீசி வளர முயன்ற ‘முல்லை' யில் தான், புதுமைப்பித்தன் எழுதிய விபரீத ஆசை வெளி வந்தது. லா. ச. ராமாமிர்தம், எம். வி. வெங்கட்ராம் கதைகளும் வந்தன. கா. ஸ்ரீ. ஸ்ரீ. ரசமான ஒரு நெடுங்கதை எழுதினார். இலக்கியத்தில் ஆபாசம் என்ற கூச்சல் அர்த்தமற்றது, போலியானது, தமிழ் இலக்கியத்துக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது என்று விரிவாகவும் விளக்கமாகவும் கு. அழகிரிசாமி கட்டுரை எழுதினார். ஆண்-பெண் உறவு பற்றிய ஞானம் தெளிவாகக் கற்பிக்கப்பட வேண்டிய அவசியத்தை விளக்கியும் கு. அ. இடைசைப் புலவன் என்ற பெயரில் ஒரு கட்டுரை எழுதினார்.

இப்படி மறுமலர்ச்சி வேகத்தில் வளர முயன்ற 'முல்லை' விரைவிலேயே நின்றுபோயிற்று. அழகிரிசாமியும் ரகுநாதனும் 'சக்தி' மாத இதழில் சில வருடங்கள் பணிபுரிந்தார்கள் . 'சக்தி' நின்றுவிட்டதும் ரகுநாதன் திருநெல்வேலி சேர்ந்தார்.

1954 டிசம்பரில் 'சாந்தி' தோன்றியது. இடைக்காலத்தில் ரகுநாதன்