பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17. பிரக்ஞை


“இலக்கியப் பத்திரிகை ஆரம்பிப்பதும் ஆரம்பித்த பத்திரிகையைச் சில மாதங்களில் அல்லது சில வருடங்களில் நிறுத்திவிடுவதும் தமிழ் இலக்கிய உலகத்திற்குப் புதியதல்ல. இந்தப் பத்திரிகை எழுத்துலகத்தில் ஒரு திருப்பத்தையோ, ஒரு செம்புரட்சியையோ ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை.

இது என்ன பத்திரிகையா, அது என்ன படமா, இது என்ன எழுத்தா, அது என்ன நடிப்பா என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறீர்களே ஒழிய நீங்கள் என்ன செய்துவிட்டீர்கள்? இது பலர் எங்கள் மேல் சுமத்திய குற்றச்சாட்டு.

எழுதத் தெரியாதவர்கள் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பத்திரிகை நடத்தத் தெரியாதவர்கள் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். படம் எடுக்கத் தெரியாதவர்கள் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

நாங்கள் இதுவரை ஒன்றும் செய்துவிடவில்லைதான். செய்து விட்டோம். 'பிரக்ஞை'யை ஆரம்பித்துவிட்டோம். இனி எங்களை யாரும் குற்றம் சொல்ல முடியாது.”

'நாங்களும்... என்ற தலைப்பில் இப்படி ஒரு புதுமையான அறிவிப்புடன் பிரக்ஞை ஆரம்பிக்கப்பட்டது, மாத ஏடு ஆக, 1974 அக்டோபரில்.

முதல் இதழில்- அட்டையில் கிருஷ்ணமூர்த்தியின் 'லினோகட்' ஓவியம். பாலகுமாரன் எழுதிய 'விளிம்பு', ராமச்சந்திர வைத்தியநாத்தின் பயணம் என்ற கதைகள். லா. ச. ரா. வுடன் பேட்டி-ஐராவதம் முத்து சாமியின் மூன்று நாடகங்கள்-தி. நா. ஜெயராமன், 'கர்ம் ஹவா' என்ற இந்திப் படம் பற்றிக் கட்டுரைகள். சில கவிதைகள். ஓவியக் கண்காட்சி, மாணவர் திரைப்படங்கள் பற்றிய குறிப்புகள்-இடம் பெற்றிருந்தன.

பத்திரிகையின் அளவும் அமைப்பும் விஷயங்களும், அப்போது வெளிவந்து கொண்டிருந்த க ச ட த ப ற வை நினைவுபடுத்துவதாக