கற்பு
109
எதற்கு? பேசுங்கள் நாதா! பேசமாட்டீர்களா ? உங்களைப்போலவே இவ்வூரும் வாய் மூடிக் கிடக்றதே! பழி துாற்றும் வகையில் பாண்டியன் தவறு செய்தான்; அவனால் வந்த வினை இது' என்று ஊராரும் எவரும் சொல்வார்களா?
இவ்வூரில் பத்தினிப் பெண் உண்டா? இல்லையா? சான்றோர்கள் உண்டா? இல்லையா? தெய்வமும் உண்டா? இல்லையா?
(ஒரு மணி ஒலி!
கண்ணகி உன் மலர்முகம் வாடியிருக்கிறதே! வருந்தாமல் இரு.
கண்ணகி : என்ன இது? இது சொல்லத்தான் உயிர்
ஊசலாடிக்கொண்டிருந்ததா? அல்லது மாயமோ! கனவோ! அல்லது என் உள்ளத்தே தோன்றிய மயக்கமோ! ஒன்றும் விளங்கவில்லையே!... இனி எங்குச் சென்று என் கணவனைத் தேடுவேன்...? ஆ நாதா? இல்லை. இது மெய்யுரையன்று. என் காய் சினம் தணிந்தாலன்றிக் கணவனைக் கைகூடேன்... என்சினம் தணிவதற்குரிய ஒரே வழி, கொடுமை விளைவித்த பாண்டியனைக் கண்டு, குற்றம் விளைவித்ததற்குக் காரணம் கேட்பதே! ஆம்; இப்போதே செல்லுகிறேன், பாண்டிய மன்னனின் பாழ்மனைக்கு.
காட்சி : 4
பாண்டியன் அரண்மனை
கண்ணகி : (வாயில் காப்போனை நோக்கி) வாயில் காப்
போனே! வாயில் காப்போனே! முறைபிறழ்ந்த மன்னனது நெறிபிறழ்ந்த அரண்மனையின்