பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

தமிழ்ச் செல்வம்


தமிழ்ச் செல்வம்

அப்படியே ஆகட்டும் அப்பா (தந்தை உட்செல்லு கிறார்) அம்மா, நாங்கள் இருவரும் சென்று வரு கிறோம். விடை கொடுங்கள்:

எங்கேயப்பா?

செல்வம் தேட. இவ்வூரில் இருந்தே தேடக் கூடாதா? என்னம்மா! தேடி வாருங்கள் என்று அப்பா சொன்னதிலிருந்தே அவர் கருத்து விளங்க வில்லையா? அப்பாவின் கட்டளைப்படி விடை கொடுங்கள். -

அப்படியானால், விரைவில் வெற்றியோடு திரும்பி

வாருங்கள்.

(சென்று விடுகின்றனர்1

காட்சி : 2

தெரு

(கண்ணனும் திண்ணனும் வருகிறார்கள்)

கண்ணன் : தம்பி, அப்பா என்ன சொன்னார், நினை

விருக்கிறதா?

திண்ணன் நிறைந்த செல்வத்தைத் தேடி வாருங்கள்

జీ :

தி :

என்றார். - ஆம். தேடி வாருங்கள் என்றுதான் சொன்னார்.

தேடிக் கொண்டு வாருங்கள் என்று சொல்ல

வில்லையே? அதுதானண்ணா, எனக்கும் விளங்கவில்லை. அப்பா ஏதோ உட்கருத்துடன்தான் சொல்லி இருக்

கிறார்.

எது செல்வம் என்றே நமக்குத் தெரிய வில்லையே! அதை எப்ப்டித் தேடுவது? .