பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

இத் தமிழ்ச் செல்வத்'தை"நமக்குக் கொடுத்த நாடக ஆசிரியருக்கு நாம் என்ன கைம்மாறு செய்யக்கூடும்?இந்தச் செல்வம், ஏனைய செல்வத்தைப்போல் அன்றி, என்றும் குன்றாத செல்வமாகக் காட்சி அளிக்கிறது. படிக்கப் படிக்க மேலும் மேலும் பயன் தரும் செல்வம். இதை உதவிய ஆசிரியருக்கு நாம் செய்யக்கூடிய கைம்மாறு ஒன்றுண்டு. அது 'தமிழன்' என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவனும், தமிழ் நாட்டிலிருந் தாலும் சரி, வேறு எந்தக் கண்டத்தில் குடியேறியிருந் சரி, அவன் இப்புத்தகத்தை வாங்கிப் படித்து, உணர்ந்து மகிழ்ந்து, நமது முன்னோர்களைப் போல் நாமும் ஏதாவது தமிழ் உலகிற்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணுவதேயாகும். -

எனக்கு ஈசன் அருளிய எண்பத்து இரண்டாவது வயதில், எனது நண்பர் விசுவநாதம் அவர்கள் தமிழுக்குச் செய்துள்ள இப்பேருதவியில், நானும் ஒரு தினையளவு பங்கெடுத்துக் கொள்ளுமாறு, எனக்கும் இம் முன்னுரை எழுத இடங் கொடுத்ததற்காக, அவருக்கு எனது மண்மார்ந்த மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் நாடகக்கல்ை வாழ்க! தமிழ் அன்னையைப் போற்று பவர்கள் வாழ்க! தமிழ் அன்னை என்றும் இளமை குன்றாது வாழ்க! ...

இங்ங்ணம்,

சென்னை, தங்கள் ஊழியன் 15-12-1954 ப. சம்பந்தம்