காதல்
53
தோ :
5.3
அம்மா! அம்மா! அதோ விரைந்துவரும். தேரின் ஒசை கேட்கிறது. அவராகத்தான் இருக்க வேண்டும். - ஆ என் காதலர் வந்துவிட்டாரா? எங்கேயடி? பொறு, மனமே பொறு. என்னடி விளையாடுகிறாயா? இனிமேல் ஏன் நான் உங்களுடன் விளையாட வேண்டும்? அதற்குத்தான் வந்துவிட்டாரே அவர்!
அதோ அவரேதான்! - போடி போடி, விரைந்து போய் வெளிக்கதவை சாத்தித் தாழ்ப்பாள் போடு. -
என்னம்மா இது இத்தனை நாட்களாக ஏங்கி
அழுது கொண்டிருந்தீர்கள்! இப்பொழுது அவர் வந்தவுடன்...
- போடி, நான் சொன்னபடி செய். குறித்தபடி
வராமல், என்னை எவ்வளவு வேதனைக்குள்ளாக் கினார்? நிற்கட்டும் அங்கேயே! சரியம்மா!
(தோழி தாழ் இடுகிறாள். தலைவன் வந்து வீட் டிற்கு முன் தேரை நிறுத்தி இறங்குகிறான்.1
தலைவன்: என்ன இது, திறந்திருந்த கதவு திடீரென்று
தோ :
த :
அடைபட்டுவிட்டது? ஒ! குறித்தபடி நான் வர
வில்லையென்ற கோபமோ?...கண்ணே குழலி பூங்குழலி கதவைத் திற. (மீண்டும் தட்டுகிறான். )
அயோ பாவம்! ஹஅம். இத்தனை நாட்களாக என் மனம் என்ன பாடு பட்டிருக்கும்?
தலைவன் : கனிமொழிச் செல்வமே உன் காதலன் வந்
திருக்கிறேன். கதவைத் திற. (மீண்டும் தட்டு கிறான்) என் உயிருக்குயிரான அமுதே தாமரை