பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

சிறந்த தமிழ் அறிஞர் தமிழின் இனிமையும் பெருமையும் தோன்ற இதனை நல்ல முறையில் வகுத்து நாடக உலகிற்கு ஒரு புதிய வழியைக் காட்டியிருப்பது.

திருச்சி விசுவநாதம் அவர்களைத் தமிழகம் இதுவரை சிறந்த வணிகராக, நாவன்மை மிக்க, நாவலராக, மொழிப் போராட்ட வீரராக, தன்ன லம் கருதாத அரசியல்வாதியாக, நுண் அறிவு மிகுந்த எழுத்தாளராக அறிந்திருக்கிறது. இன்று நாம் இத் தமிழ்ச் செல்வத்'தின் மூலம் தமிழகத்தின் சிறந்த நாடக ஆசிரியர்களில் ஒருவ ராகவும் அவர்களைக் காண்கிறோம்.

எங்கள் நிலைய வாயிலாக, இவ்வளவு சிறந்த நூல் ஒன்று வெளிவர வாய்ப்பளித்த திரு. விசுவநாதம் அவர்களுக்கு எங்கள் நன்றி உரியது. நாடகக் கலையின்பால் உள்ள காதலால் தமது முதிர்ந்த வயதிலும் இந் நாடகம் முழுவதையும் படித்துப் பார்த்து, அரிய முன்னுரை தந்துதவிய நாடகப் பேராசிரியர்-திரு. ப.சம்பந்த முதலியார் B A, B . அவர்களுக்கும். எங்கள் உள்ளங் கனிந்த நன்றி உரியது.

ஃ. பாரி நிலையத்தார்.