பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

உவமைக்கவிஞர் சுரதா


நூல் : கனம் திவான் பகதூர் எல்.டி. சுவாமிக்கண்ணு பிள்ளை,
ஜீவிய சரித்திரம் - (1926) பக்கம் 28
நூலாசிரியர் : திருவாளர் ஆ. ஷண்முகம் பிள்ளை
திருஷ்டி - கண்ணேறு

'திருஷ்டி விழுந்தது' என்பதை 'திஷ்டிவிழுந்தது, கண்திஷ்டி' என்று வழங்குகின்றனர். திருஷ்டி என்றால் கண், அதனைச் சிதைத்து திஷ்டி என வழங்கினும், கண் திஷ்டி என்பது (Gate) கேட் வாயிற்படி (Lantern) லாந்தர் விளக்கு என்பன போலல்லவா இருக்கின்றது. இது எப்படி பொருந்தும்? இதற்கு ஏற்ற தமிழ்ச்சொல் கண்ணேறு என்பதாம். கண் + ஏறு.

இதழ் : சத்திய நேசன் (1926 பிப்ரவரி)
தொகுதி - பகுதி, 2 பக்கம் - 37
Tregedy - துக்க முடிவுகொண்ட இலக்கியம்

காவிய லக்ஷணம், அலங்காரம், முதலியவைகளைக் கொண்டும் திராவிட பாஷை சிறப்புற்றதென்றும் ஆரியபாஷை அதற்குச் சிறிது குறைந்த நிலைமையிலுள்ளது என்பவர்களு மிருக்கின்றனர். அதற் குதாகரணமாய் வடமொழியில் துக்க முடிவுகொண்ட இலக்கியம் இன்மையைக் கூறித் தமிழில் காணப்படும் சிலப்பதிகாரத்தைச் சிறப்பித்துப் பேசுகின்றனர் திராவிடாபிமானிகள்.

நூல் : நமது பரதகண்டம் 203,4 முதற்பதிப்பு (1926)
ஆறாவது சுருக்கம் - தமிழகத்தின் நாகரிகம், பக்கம் 121,
நூலாசிரியர் : வை. சூரியநாராயண சாஸ்திரி, M.A., L.T,
பரோபகாரம் - ஒப்புரவு

ஒப்புரவு (பரோபகார) நினைவும் செயலும் பெறுவதற்கு உயிர்ச்சார்பு இன்றியமையாதது, மனிதன் மற்ற உயிர்களோடு கலந்து வாழ வாழ, அவன்பாலுள்ள தன்னலம் என்னும் பாசம் அறுந்து போகும்.

நூல் : மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் (1926) பக்கம் :39
நூலாசிரியர் : திரு. வி. கலியாணசுந்தரனார்