பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

101


Melody (Gudson, ) – ஒழுகிசை

தமிழ்நாட்டுச் சங்கீதம் வடநாட்டுச் சங்கீதத்தைப் போல ஒழுகிசையைத் தழுவி நிற்குமல்லாது ஆங்கிலேய சங்கீதத்தைப் போல ஒன்றிசையை தழுவி நிற்பதல்ல. ஒழுங்கிசையை ஆங்கிலத்தில் மெலடி (Melody) என்பார்கள்.

நூல் : செந்தமிழ்ச் செல்வி (1926) பக்கம் : 224
திருவனந்தபுரம் தி. இலக்குமண பிள்ளை பி.ஏ.,
Table Talk – உண்டாட்டுரை
இதழ் : நச்சினார்க்கினியன் (1926) பக்கம் : 58
மொழிபெயர்ப்பு : நச்சினார்க்கினியன் ஆசிரியர்
ஜீவானந்தம் - உயிர் இன்பன் (1926)

இளமையிலே ஜீவாவிடம் தமிழ்ப்பற்று மிகுதி. சிராவயலின் ஆசிரம வாழ்க்கையும், ஆசிரம வாழ்க்கையில் அவர் கற்ற ஏராளமான தமிழ் நூற்களும் அவருடைய தமிழ்ப் பற்றை வளர்த்தன.

இக்காலத்தில் தமிழ் நாட்டில் காங்கிரஸ் இயக்கத்துக்கும் சுயமரியாதை இயக்கத்துக்கும் கிட்டத்தட்ட சமமாக நடைபெற்ற இன்னொரு இயக்கம் தனித்தமிழ் இயக்கம். பிராமண ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு வடிவமாகவே - அதாவது ஆரிய எதிர்ப்பு - ஆரிய கலாச்சார எதிர்ப்பு, அதன் குறியீடாக ஆரிய மொழி எதிர்ப்பு - மறுபுறம் தனித்தமிழ் இயக்கம் - எனச் செயல்பட்டது. மறைமலையடிகளார். இதன் தானைத் தளபதி, போலியான பிராமணிய கலாச்சார எதிர்ப்புக் குரல் கொடுத்த இந்த இயக்கத்தின் ஒளியுள்ள அம்சம் தமிழ்ப்பற்று. அதாவது தமிழனின் உணர்ச்சி மற்றும் கருத்து வெளியிட்டுக் கருவியாக தமிழையே முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்ற அம்சம். இந்த அம்சம் இளைஞன் ஜீவாவைக் கவர்ந்தது. ஜீவா தனித்தமிழ் பக்தரானார்.

இந்த வெறி எவ்வளவு தூரம் ஜீவாவைப் பிடித்திருந்தது என்பதற்குப் பல உதாரணங்களைக் கொடுக்கலாம். தோழர் சி.பி. இளங்கோ கிருஷ்ணன் என்ற தனது பெயரைப் பறிகொடுத்தார். ஜீவானந்தம் என்ற பெயர் 'உயிர் இன்பன்' என்று மாறிவிட்டது.

நூல் : ஜீவா என்றொரு மானுடன் (1982) பக்கங்கள் 22, 23
நூலாசிரியர் : பொன்னீலன்