126
உவமைக்கவிஞர் சுரதா
தோட்டம் பயிரிடுதல், மரமறுத்தல், மூச்சடக்கி விடுதல் (பிராணாயாமம்) முதலியன சாதாரணமான உடற்பயிற்சி முறைகளாகும்.
நூல் | : | உடல் நூல் (1934), பக்கம் - 41 |
நூலாசிரியர் | : | கா. சுப்பிரமணிய பிள்ளை, எம்.ஏ., எம்.எல். |
Physiology – உடற்செயல் நூல்
உடலின் பல பகுதிகளின் அமைப்பைப் பற்றிக் கூறுண் நூல் (Anatomy) உடற் கூற்று நூலெனப்படும். அவற்றின் செயலைப் பற்றிக் கூறும் நூல் (Physiology) உடற்செயல் நூலெனப்படும். இரண்டும் உடல் நூலென்பதிலடங்கும்.
நூல் | : | உடல்நூல் (1934) முன்னுரை பக்கம் - 1 |
நூலாசிரியர் | : | கா. சுப்பிரமணிய பிள்ளை, எம்.ஏ., எம்.எல். |
ஒரு நீர்த்துளியைப் பூதக் கண்ணாடி வழியாய்ப் பார்க்கும் பொழுது அதில் காணப்படும் மிகச் சிறிய உயிர்களின் உடலொன்றினை நுணுகி நோக்கின் அது குழைவான கண்ணாடி பேன்ற சத்தின் நுண்ணிய பிண்டமாகக் காணப்படும். அதனை அறிவியல் நூலார் முதற்சத்தென்பர் (Proto-Plasm).இம் முதற் சத்தானது மிக நுட்பமான உணவுத் துகள்களையுடையது. அதன் ஒரு பகுதியில் வித்துப் போன்ற ஓரிடம் காணப்படும். அதுவே அதன் உயிர்ப்பகுதி.
நூல் | : | உடல் நூல் (1934) முன்னுரை - பக்கம் -2 |
நூலாசிரியர் | : | கா. சுப்பிரமணிய பிள்ளை, எம்.ஏ., எம்.எல். |
வித்தோடு கூடிய முதற் சத்தினை உயிர்க் கருவென்னலாம். அது ஒரு சிற்றறை போன்றிருத்தலால் அதனை உயிர்வாழ் சிற்றறை (Living Cell) யெனவும் சிற்றணுக் கூடெனவும் நூலோர் கூறுவர்.
- மேற்படி நூல் : முன்னுரை : பக்கம் - 2