பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

131


இரேழி - இடங்கழி

அவ்வளவில் அவ்வீட்டின் இடங்கழி (இரேழி) யில் படுத்திருந்த அவரது அன்னை தன் மகனை விளித்து 'குழந்தாய்! இத்தன்மையை பாபத்திற்கு ஒரு தரம் - ராம - வெனக் கூறினால் போதும் என்பதாய் உனது தந்தை சொல்லக் கேட்டிருக்கின்றேன்; அப்படிக்கிருக்க, நீ மும்முறை கூறுமாறு சொல்கின்றாயே!' எனக் கேட்டனள்.

நூல் : ஸ்ரீ பகவன் நாம போதேந்திர சுவாமிகள்
திவ்விய சரிதம் (1934) பக்கம் - 27
நூலாசிரியர் : மாந்தை. சா. கிருஷ்ணய்யர்
Room - உள்ளில்

ஓர் வீட்டின் தாழ்வாரத்தில் ஓர் அடி கண்ணாடி சுவரில் இருக்க, இரண்டு சிறு பையன்கள் கண்ணாடியைப் பார்க்க அவர்கள் சாயல் நிழல் கண்ணாடியில் தெரிய, அந்நிழல் சுவருக்கு உள் ஹாலில் இரண்டு தப்படியில் கண்டார்கள். சிறுவர்கள் பார்த்துக் கையை ஓங்கினார். நிழலும் ஓங்கியது. காலைத் தூக்கினர்ர்கள். நிழலும் தூக்க அந்த ரூமில் (உள்ளில்) இரண்டு பயல்கள் நம் வீட்டில் இருந்து கொண்டு கையை ஓங்கி அடிக்க வருகிறான், ரூமைத் திறந்து இழுத்துப் போட்டு அடிப்போம் வாங்கடா - என்று கதவைத் திறக்க ஓடினான்.

நூல் : அநுபவ ஆத்மஞான விளக்கம் (1934) பக்கம் -12
நூலாசிரியர் : வைத்திலிங்க சுவாமிகள்
மேலணிக்குழி குடிக்காடு.
Homeopathy - ஒப்புமுறை வைத்தியம்

பல நோய்கள் இயற்கைக்கு மாறான வாழ்க்கையினாலேயும் நல்லுணவு கொள்ளாமையினாலும் ஏற்படுகின்றன. ஒழுங்கான வாழ்க்கையும் சுகாதாரமான உணவும் நோயைத் தடுப்பன என்று ஒப்புமுறை (Homeopathy) வைத்தியத்தைக் கண்டு பிடித்த ஹைனமன் (Hahenemann) என்னும் ஜர்மானிய வைத்தியர் சொல்லுகின்றனர்.

நூல் : நூல் உடல்நூல் (1934), பக்கம் -35
நூலாசிரியர் : கா. சுப்பிரமணிய பிள்ளை, எம். ஏ., எம். எல்.