16
உவமைக்கவிஞர் சுரதா
ஸாகூதம் - உள்ளுறை
அவ்வளவில் அச்சபையருகிலிருந்தோர் தருவின் மீதிருக்கும் குயிலின் இனிய குரற் கேட்டலும், அதனை முன்னிட்டுக் கூறியதாக அரசனைக் குறித்து, 'ஒ! குயிற் பிள்ளாய்! சுருதிக்கு இதமில்லாமலே கடினமாகக் கூவுகின்ற நீசமாகிய காக்கையின் சம்மந்த மில்லாவிடின் நீ சிறப்படைவாயன்றோ' என்று முன்னிலைப் புறமொழியாக (அந்நியாபதேசம்)வோர் செய்யுளைக் கூறினர்.
உள்ளுறைப் (ஸாகூதம்) பொருளினையுடைய அவ்வுரையைக் கேட்ட 'சடபிஞ்ஞர்' - புத்தர்கள், மிதியுண்ட அரவு சீறியெழுந்தாற்போலும் வெகுண்டெழுந்து சமய தருக்கத்திற்குத் தாமே முன்னிட்டு வாதிக்கத் தொடங்கினர். -
நூல் | : | ஸ்ரீ சங்கர விஜயம் (1879) பக்கம் - 6 |
நூலாசிரியர் | : | தொழுவூர் வேலாயுத முதலியார் (இராமலிங்க அடிகள் மாணவர்) |
முக்தியின் அவஸ்தையில் மனம், புத்தி முதலியவைகள் நாசமடைந்துவிடுமானால் ஆத்ம விநாசத்திற்கும் முக்திக்கும் பேதமென்ன? ஞானமற்ற ஆத்மாவோ ஆத்மாவேயல்ல, ஞானத்தினாலேயே அதன் சத்தை (இருப்பு) சொல்லப்படுகின்றது.
நூல் | : | ஜீவாத்துமா (1881) பக்கம் - 10 |
நூலாசிரியர் | : | பிரம்மோபாஸி |
பிராந்தி - மயக்கம்
ஜடமதியுள்ளவர்கள் (புல்லறிவாளர்) சரீரத்தின் சாரமே ஆத்மாவென்றும், சரீரம் நாசமடையுங்கால் இதுவும் நாசமடைந்து போகின்றதென்றும் நினைக்கின்றார்கள்; ஆனால் இது அவர்களுடைய பிராந்தியே (மயக்கமே) யொழிய வேறல்ல.
நூல் | : | ஜீவாத்துமா (1881) பக்கம் - 3 |
நூலாசிரியர் | : | பிரம்மோபாஸி |