இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழ்ச் சொல்லாக்கம்
187
அறிவுடையவர்களாகத் தங்களைத் தாங்களே மதித்துக் கொண்டிருக்கும் செல்வர் சிலருக்கு முன்னுண்டது நன்கு செரித்துவிட்டது எனத் தாமறிந்து கொள்ளாமல், அறிவற்ற பொருளாகிய காலக் கருவி (கடிகாரம்) அதனையுணர்த்த, மேலும் மேலும் பஞ்சுப் பொதியடைப்பது போல வயிற்றை அடைத்துத் தமது அருமை உடலைக் கெடுத்துக் கொள்கிறார்களே! இஃதென்ன அறியாமை!
நூல் | : | கட்டுரைப் பொழில் (1958), பக்கம் 15 |
நூலாசிரியர் | : | பெருஞ்சொல் விளக்கனார். முதுபெரும் புலவர் |
அ. மு. சரவண முதலியார் | ||
(1936ல் நிகழ்த்திய பெரிய புராணச் சொற்பொழிவிலிருந்து எடுக்கப் பெற்றது.) |