பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

உவமைக்கவிஞர் சுரதா


ஆசிரியர் கச்சியப்ப சிவாச்சாரியார் இரணியனைப் பொன்னன் என்றே கூறுவார். 'ஆடகப் பெயரின் அவுனர் மார்பினன்' என வரூஉம் குமரகுருபரர் வாக்கும் (திருவாரூர் நான்மணிமாலை) ஈண்டு நினைவு கூறற்பாலது.

நூல் : பணம் (1953) பக்கம் - 15,
நூலாசிரியர் : ரெ. சேஷாசலம், எம்.ஏ.,
(ம. தி. தா. இந்துக் கல்லூரி - பொருளாதார ஆசிரியர்)