தமிழ்ச் சொல்லாக்கம்
23
இன்ப்ளூயென்ஸா என்னும் இங்கிலீஷ் பெயரையுடைய முடக்குக் காய்ச்சல் சென்னை, பெங்களூர், ரேச்சூர் முதலிய சென்னை இராஜதானி அநேக இடங்களில் வலைவீசி சிலரைக் கொள்ளையுங் கொள்ளுகிறது. கடந்த பக்ஷம் ஒரு ஸ்திரி இச்சுரம் பொறுக்காமல் கிணற்றில் விழுந்து தற்கொலையும் செய்து கொண்டாள்.
இதழ் | : | ஸ்ரீலோரஞ்சனி (1890 - ஏப்ரல்) |
மேற்படி புத். பக். 7. |
இப்போது இவ்வுலகத்தினற்கோர் பெரும்பேறென்று சொல்லும்படியாகிய புகைவண்டி யென்ன, தந்தி யென்ன, நீராவிக் கப்பலென்ன, அச்சு இயந்திரங்களென்ன, Millsகளென்னும் ஆலைகளென்ன, Baloonsகளென்னும் ஆகாய ரதங்களென்று சொல்லும்படியாகிய மகா அற்புதமான கருவிகளையும், மற்ற சாமான்களையும் உண்டு பண்ணியவர்கள் யார்? அம் மெய்ச் சமயமாகிய கிறிஸ்து சமயத்தை அனுட்டித்தவர்களன்றோ?
மேற்படி இதழ் | : | (1-5-1890) புத்தகம் - 4. இல - 4. |
கட்டுரை | : | கிறிஸ்துமதம் முளைத்ததேன்? பக்கம்-28. |
கட்டுரையாசிரியர் | : | பீமநகர் சங்காபிமானி |
இந்து மதாபிமான ஸங்கம். இச்சங்கம் ஸ்தாபித்து இரண்டு வருடமாகிறது. இதில் மெம்பராய் சேரவேணுமாகில் மாதம் சபைக்கு 4 அணாவும், சங்கத்திற்கு 1 அணா முதல் சந்தாவாக முன்னாடி செலுத்தி வரவேண்டியது. கிளைச் சபையாக சேர்க்கவேண்டுமாகில் வருடம் ஒன்றிற்கு ரூ. 5 கொடுக்கவேண்டியது. கல்வி முதலிய விஷயங்களில் தேர்ச்சியடைந்த வித்வான்களும் பண்டிதர்களும் கெளரவ மெம்பர்களாகச் சேர்க்கப்படுவார்கள். நன்கொடை (Donation) கொடுக்கப் பிரியப்பட்டவர்கள் கொடுத்து வரலாம்.
மேற்படி இதழ் | : | (1-5-1890) புத் - 4. இல . 2. பக். - 16. |
எழுத்தாளர் | : | தி.மா. பழனியாண்டி பிள்ளை. |