பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

29


நூல் : மழவை, மகாலிங்க ஐயர் இயற்றிய இலக்கணச் சுருக்கம் (1861) பக்கம் - 1,
ஆண்டிமொனி - நிமிளை
அச்செழுத்து எப்படி உண்டாகிறது?
நாலு பங்கு ஈயத்துக்கு ஒரு பங்கு நிமிளை (ஆண்டிமொனி) கூட்டுவார்கள்.
நூல் : மூன்றாம் ஸ்டாண்டர்டு புத்தகம் பதப்பொருளும் வினா விடையும் (1897)
நூலாசிரியர் : எத்திராஜ முதலியார்.
அம்போதரங்கம் - நீரின் அலை

அம்போதரங்கம் (நீரின் அலை) அல்லது அசையடி - இது கடல் அலைகள்போல அடிகள் அளவடியாய்ப் பெருத்தும், சிந்தடியாய்ச் சிறுத்தும், குறளடியா யதனினும் சிறுத்தும் தாழிசைக்குப் பின் வருவது; நாற்சீராலாகிய ஈரடியால் இரண்டும், ஒரடியால் நான்கும், முச்சீரடியால் எட்டும், இரு சீரடியால் பதினாறுமாக வருவது சாதாரணம்.

நூல் : தமிழ் இலக்கணத் தெளிவு (1897) பக். 273.
நூலாசிரியர் : ஜோஸெப், பி.ஏ., முதுநிலை
விரிவுரையாளர், ராஜாமுந்திரி கல்லூரி.
அனுடம் - பனை
கேட்டை - துளங்கொளி
ஆயிலியம் - கட்செவி
மிருகசீரிடம் - மான்றலை


மேற்படி நூல் : பக்கம் - 334.
குறிப்பு : இச்சொல்லாக்கங்கள் அடிக்குறிப்பில் உள்ளவை)