பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

உவமைக்கவிஞர் சுரதா


பண்டிதரைப்போல ஒரு வார்த்தைக்காக ஐம்பது வீண் நியாயங்கள் கொண்டு வந்து அவர்கள் வழக்காடுவார்கள்.

நூல் : சீனம், சீனருடைய சித்திரப்படச் சரிதைகள் (1902) பக். 57.
குறிப்பு : நூலின் முதல் பக்கம் கிடைக்காததால் ஆசிரியர் பெயர் குறிக்கவில்லை).
விரதம் - காப்பது

இப்போது செய்யும் விரதானுட்டானங்களெல்லாம் ஒவ்வொரு கடவுளுக்குரிய, திதி, வாரம், நக்ஷத்திரங்களில், உபவாசம், பால், பழம், பலகாரம், அவிசு, ஏகவார போசனஞ் செய்தலே அனுஷ்டானமாக இருக்கிறது. இப்படிச் செய்வதில் அந்தந்தக் கடவுளுக்குரிய வந்தனம், வழிபாடு, ஜபம், தியானம், அக்கடவுளுக்குரிய புராண சிரவணம் ஒன்றும் செய்கிறதில்லை. ஆகார பேதங்களும் நீராகாரமும் பல காரணங்களால் ஏற்படும். அவைகள் எல்லாம் விரதங்களாகா.

விரதம் என்னும் பதத்திற்குக் காப்பது விரதமென்பது பொருள். அதாவது இன்ன காரியத்தை யின்ன விதமாகவே செய்து முடித்த பிறகு போசனம், தைலம், தீட்சை, இவைகளைச் செய்து கொள்ளுகிறதென்று நியமித்து, நியமித்தபடியே செய்து முடிப்பதே விரதமென்பார்கள்.

நூல் : சைவ சித்தாந்தப் பிரசங்கக் கோவை (1902) விரதமான்யிம், பக்கம்-7
சொற்பொழிவாளர் : சோ. வீரப்ப செட்டியார் (நாகை வெளிப்பாளையம் சைவ சித்தாந்த சபைச் சொற்பொழிவு)
Junction – சேர்க்கை

சென்னப்பட்டணத்திலிருந்து தென் மேற்கே தூத்துக்குடிக்குப் போகிற தென் இந்தியா ரயில்வேத் தொடரில், விழுப்புரம் ஜங்க்ஷன் (சேர்க்கை) ஸ்டேஷனுக்கும், மாயூரம் ஜங்க்ஷன் (சேர்க்கை) ஸ்டேஷனுக்கும் உள்ள ரயில்வே.

நூல் : சிவக்ஷேத்திர யாத்திரானுகூலம் (1903) பக், 1
நூலாசிரியர் : சாலிய மங்கலம் மு. சாம்பசிவ நாயனார்.