இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழ்ச் சொல்லாக்கம்
61
1870வது வருஷம், ஆலிஸ் இராஜகுமாரியார் சரித்திரத்திலும், ஐரோப்பாவின் சரித்திரத்திலும் அதிக முக்கியமானது. இவ்வருஷ முதலில் லூயிஸ் இராஜகுமாரரும் அதற்கு மேல் விக்டோரியா இராஜகுமாரியும் சிறு இராஜகுமாரனும் செம்பொட்டுச்சுரம் (Scariet Fever என்னும் வியாதியால் வருந்தினார்கள்.
நூல் | : | பன்னிரண்டு உத்தமிகள் கதை (1920) பக்கம். 147 |
தமிழாக்கம் | : | திவான் பகதூர் வி. கிருஷ்ணமாச்சாரியார். |
நியாயாதிபதி : பாரிஸ்டரே, நல்லது நீர் கைதியிருந்த கூட்டிற்குள் போவீர்.
பாரிஸ்டர் : ஐயா, எனக்குக் கைதியைத் தப்பித்து விடப் புத்திமதி சொல்ல அதிகாரம் கிடையாதா என்று சொல்லிக் கொண்டே கூட்டிற்குள் சென்றார்.
நூல் | : | சிறுமணிச்சுடர் (1920) பக்கங்கள் : 14, 15 |
நூலாசிரியர் | : | மதுரை எஸ். ஏ. சோமசுந்தரம் |
திலகம் என்பது திலதம் எனவும் வழங்கும். இது வடசொல். இதனைத் தமிழர் பொட்டு என்பர். இது, 'பொட்டணியா னுதல் போயினு மென்று பொய்போலிடை' என மணிவாசகர் கூறலானு மினிது விளங்கும்.
நூல் | : | சீகாளத்திப்புராணம் மூலமும் உரையும் (1920) பாயிரம், பக். - 3 |
உரையாசிரியர் | : | மகாவித்வான் காஞ்சிபுரம் இராமாநந்தயோகிகள் |
கண்யம் | — | மேம்பாடு |
குதவருத்தம் | — | மூலநோய் |
அந்தரியாமி | — | உள்ளீடா யிருப்பவன் |
பாவம் | — | அறன்கடை |
சம்பத்து | — | செல்வம் |