தமிழ்ச் சொல்லாக்கம்
69
அக்காலத்தில் சென்னை பிரஸிடென்ஸி காலேஜில் மாத மெடிக் புரொபெஸராக (கணித நூற்புலவர்) இருந்து காலஞ்சென்ற இராயபஹதூர் பூண்டி அரங்கநாத முதலியாதொருவர்தான், இவ்வாசிரியர் சிவபதம் பெற்றதும், இவரது ஜேஷ்ட குமாரனாகிய அடியேனுக்குத் தாம் மேற்பார்த்து வந்த தமிழ் டிரான்ஸி லேட்டர் ஆபீஸில் உத்தியோகஞ் செய்வித்து, அதன் மூலமாய் எமது குடும்பத்தைத் தமது நண்பரைப் போல் பாவித்துக் காப்பாற்றினவர். அந்நன்றி யென்றும் மறக்கற்பாலதன்று.
நூல் | : | ஸ்ரீ சங்கர விஜயம் (1921), 3வது பதிப்பு பக். 14 |
முகவுரை | : | தொழுவூர் வே. திருநாகேஸ்வரன்
(தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்களின் புதல்வர் |
நமோ, நம என்பவைகள் மந்திரங்களி னீற்றில் வணக்கத்தை யுணர்த்தற்பொருட்டு, வருஞ்சொற்கள்; இவற்றிற்கு 'வணக்கஞ் செய்கிறேன்', 'நமஸ்கரிக்கின்றேன்' என்பன பொருள்களாம்.
நூல் | : | கந்தர் சஷ்டி கவசம் மூலமும் உரையும் (1921 பக்கம் 24 |
நூலாசிரியர் | : | மதுரை ஜில்லா, செம்பூர் - வித்வான் வீ. ஆறுமுகஞ் சேர்வை |
டி. எம். அச்சுக்கூடம்
ஓம்
பல்லாவரம், 23.1.1922
அன்பிற்கோர் உறையுளாய்த் திகழும் திருவாளர் வே. நாகலிங்கம் பிள்ளையவர்கட்குச் சிவபெருமான் திருவருளால் எல்லா நலன்களும் உண்டாகுக!
தங்கள் அன்பின் திறத்தாலும் திருவருள் வலத்தாலும் பையனும் நானும் நலமே இங்கு வந்து சேர்ந்தோம். வரும்போது தனுக்கோடித் தங்கு நிலையத்தவர் (Station Master) வேண்டுகோளுக்கிணங்க அங்கே, 'தமிழரின் கடவுள் நிலை' என்பதைப் பற்றி ஒரு விரிவுரை நிகழ்த்தினேன்.