பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

87


பிரஸவம் - பிள்ளைப்பேறு

பூர்ணமான பிண்டாண்டத்தில் (1) குழந்தை அல்லது பிண்டம், 2) குழந்தை மிதந்து கிடக்கும் பனிநீர், 3) பனிநீரையடக்கஞ் செய்து கொண்டிருக்கும் ஜவ்வுகள், 4) மாயை, கொப்பூழ் கொடி, இவைகளடங்கி யிருக்கின்றன. ஜனன வாய்க்காலின் வழியாய்ப் பிண்டாண்டமானது வெளியில் தள்ளும் சக்திகளால் வெளியாகும் விதானத்திற்குப் 'பிரஸவம்' அல்லது 'பிள்ளைப்பேறு' என்று சொல்லப்படும்.

நூல் : மருத்துவ மாணாக்கியர்களுக்கு உபயோகமான கைப்புத்தகம் (1924) பக்கம், 15.
நூலாசிரியர் : கோ. கி. மதுசூதன ராவ்
Typewriting - கையச்சு

கும்பகோணத்தில் முனிசிபாலிடியார் ஒரு சித்திர பாடசாலை வைத்திருக்கிறார்கள். அதில் சுமார் 100 பிள்ளைகள் உயர்ந்த சித்திர வேலை செய்யக் கற்றுக் கொள்ளுகிறார்கள். டைப்ரைட்டிங் என்ற கையச்சு வேலையில் பயில பல பாடசாலைகள் எங்குப் பார்த்தாலும் இருக்கின்றன.

நூல் : தஞ்சாவூர் ஜில்லாவின் வரலாறு (1924 பக்கம் : 87
நூலாசிரியர் : ஆர். விஸ்வநாத ஐயர் (Assistant Govt., Model High School, Saidapet)
கஸ்யா - அகநகர்

இவர் திருநெல்வேலி அக நகரிலே (கஸ்பா) கீழப் புதுத் தெருவிலே குடியிருப்புடையார். 'குப்ப குறிச்சிச் செல்லம்பிள்ளை' என்று இவர் பெயர் மிகச் சிறப்பாய் வழங்கிவரலாயிற்று.

நூல் : வக்கீல் பண்டாரம் பிள்ளை என்னும் திருவாளர் தி. செ. சுப்பிரமணிய பிள்ளையவர்களின் சரித்திரச் சுருக்கம் (1924) பக்கம்-2
நூலாசிரியர் : மு. பொ. ஈசுர மூர்த்தியா பிள்ளை
மார்க்க சகாயர் - வழித்துணைவர்

தனபாலன் என்னும் வணிகற்குக் குதிரைச் சேவகனாய் வழித்துணை சென்றமையாற் றிருவிரிஞ்சைப் பெருமாற்கு 'மார்க்க சகாயர்' என்னுந் திருப்பெயர்