பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்த் தாத்தா

43

வருணனைகளைக் கேட்டு அவருக்குக் கோபம் கோபமாக வந்தது. “இவற்றை எல்லாம் பாடிக் குழந்தைகளின் மனத்தைக் கெடுத்து விடுகிறார்கள். இனிமேல் இத்தகைய புத்தகங்கள் வெளிவராமல் தடுத்துவிட வேண்டும்” என்று பேசிக்கொண்டிருந்தார். இந்தச் செய்தியைச் சில அன்பர்கள் ஆசிரியரிடம் வந்து சொன்னார்கள். ஒருநாள் அந்தப் போலீஸ் அதிகாரியைப் பார்க்க இவர் சென்றார்.

“எங்கே இவ்வளவு தூரம் வந்தீர்கள்?” என்று அந்த அதிகாரி வியப்புடன் கேட்டார். “நீங்கள் மிகவும் நல்லவர்கள் என்று கேள்விப்பட்டேன். ஆபாசமான விஷயங்களை எல்லாம் நாம் அதிகமாகப் பரவவிடக்கூடாது என்ற எண்ணம் தங்களுக்கு இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். நம்முடைய நாகரிகம் தெரிந்தவர்களுக்குத்தான் இந்த விஷயம் தெரியும். ஆனால் இலக்கியங்களின் திறத்தில் நாம் பார்க்க வேண்டிய முறையே வேறு. சங்க காலத்திலிருந்து அவற்றைப் புலவர்கள் பாடி வருகிறார்கள். செய்யுளாக இருப்பதால் அவற்றைப் படிப்பவர்களுக்கு இலக்கிய இன்பம் தோன்றுமே தவிர, ஆபாசம் தோன்றாது.” என்று ஆசிரியர் பேசத் தொடங்கினார்.

“சில பைத்தியக்காரப் புலவர்கள் கன்னா பின்னா என்று பாடிக் குழந்தைகளின் உள்ளத்தைக் கெடுத்துவிடுகிறார்கள். அத்தகைய ஆபாசப் பாடல்களைத் தடுத்துவிடத் தாங்கள் எனக்கு யோசனை சொன்னால் உபகாரமாக இருக்கும்” என்று அந்த அதிகாரி சொன்னார். அதைப்பற்றித்தான் உங்களிடம் பேச வந்திருக்கிறேன். நிதானமாகப் பேசலாம் அல்லவா?” என்றார் ஆசிரியர். “பெரியவர்களாகிய நீங்களே வந்திருக்கிறீர்கள். உங்களோடு பேசுவதைவிட வேறு வேலை என்ன இருக்கிறது?” என்றார் ஜயசிங்.

“என்னிடம் சில புலவர்கள் வந்து தங்களைத் தமிழுக்கு விரோதி என்று சொன்னார்கள். நீங்கள் அப்படி இருக்கமாட்டீர்கள் என்று நான் அவர்களிடம் சொன்னேன். பழைய இலக்கியங்களைக் கொளுத்திவிட வேண்டுமென்று நீங்கள் சொன்னதாகச் சொன்னார்கள். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டார்கள் என்று நான் எண்ணினேன். அதனால்தான் உங்களை நேரே பார்த்துப் பேசலாம் என்று வந்தேன்” என்று சொன்னர் இவர்.

“எல்லாப் புலவர்களுக்கும் என்மேல் கோபம் இருக்கலாம். பெண்களை ஆபாசமாக வருணிக்கிற காவடிச் சிந்து, திருப்புகழ் ஆகிய பாடல்கள் பரவக் கூடாது என்பது என் எண்ணம்” என்றார் அந்த அதிகாரி.

காவடிச் சிந்து, திருப்புகழ் ஆகியவற்றில் பெண்களின் வருணனைகள் இருப்பது உண்மைதான். அவற்றை மட்டும் படிப்ப