பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்த் தாத்தா

49

மிக்க கவலை அடைந்தார். அந்த வீட்டில் இவர் வைத்திருந்த ஏட்டுச் சுவடிகளையும், புத்தகங்களையும் வேறு இடத்திற்குக் கொண்டு போக வேண்டுமே, புதிய இடம் அதற்கு வசதியாக அமையுமோ, அமையாதோ என்கிற குழப்பம் ஏற்பட்டது.

ஒரு நாள் ஆசிரியர் தம் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது, அந்த வீட்டுக்காரருக்குத் தெரிந்த கணக்கப்பிள்ளை அத்தெரு வழியே போனார். ஆசிரியர் அவரை அழைத்து, "உங்கள் நண்பர் இந்த வீட்டை வேறு ஒருவருக்கு விற்க முன்பணம் வாங்கிவிட்டாராமே; என்னிடம் சொல்லியிருந்தால் நான் வாங்கிக் கொள்ளமாட்டேனா?" என்று கேட்டார்.

"போன வருஷந்தான் உங்களிடம் சொன்னாராம். நீங்கள் வேண்டாம் என்றதால் வேறு இடத்தில் மனை வாங்கிப் பெரிய வீடாகக் கட்டிக்கொள்ள நினைக்கிறார்போலும் என்று எண்ணியதாகச் சொன்னர்" என்றார் கணக்கப்பிள்ளை.

"அப்போது நான் அதைப்பற்றி நினைக்கவில்லை. இப்போது இதையே வாங்கிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அவர் பேசியுள்ள தொகைக்குமேல் நூறு ரூபாய் தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது உதவி செய்கிறேன். எப்படியாவது இந்த வீட்டை எனக்கு வாங்கித் தாருங்கள்" என்று சொல்லி அனுப்பினார் ஆசிரியர்.

அன்று மாலையே கணக்கப்பிள்ளை வந்தார். "உங்களுக்கு நல்ல சமாசாரம் கொண்டு வந்திருக்கிறேன். வீட்டுக்காரர் தாம் வாங்கிய முன்பணத்தை அவரிடமே கொடுத்துவிட்டார். இந்த வீட்டை உங்களுக்கே சாசனம் செய்து கொடுப்பதற்கும் சம்மதித்து விட்டார்" என்றார்.

ஆசிரியருக்கு மிகவும் மகிழ்ச்சி உண்டாயிற்று. காரியம் இவ்வளவு எளிதில் முடியும் என்று அவர் நினைக்கவில்லை. கணக்கப் பிள்ளை சொன்னர்: "முதலிலிருந்தே வீட்டுக்காரருக்கு இந்த வீட்டை உங்களுக்குக் கொடுக்கவேண்டும் என்பதுதான் எண்ணம். நீங்கள் வேண்டாம் என்றவுடன் அவருக்கு மன வருத்தம் ஏற்பட்டது. திரும்ப நீங்கள் வாங்கிக்கொள்ள விரும்புவதாகச் சொன்னவுடன் அவர்கள் விக்கிரய பத்திரத்தில் போட்ட சில நிபந்தனைகளைச் சாக்காக வைத்து, அவற்றுக்கு நான் சம்மதிக்க மாட்டேன் என்று, வாங்கிய முன்பணத்தைக் கொடுத்துவிட்டார்" என்றார்.

ஒரு மாதத்திற்குப் பிறகு உரிய விலை கொடுத்து ஆசிரியர் தாம் குடியிருந்த அந்த வீட்டையே வாங்கினர். கும்பகோணம் கல்லூரியில் தாம் பார்த்து வந்த வேலையைத் தமக்குப் பண்ணி வைத்த தியாகராச செட்டியாரின் நினைவாக அந்த வீட்டிற்கு,