பக்கம்:தமிழ்த் திருமண முறை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15



மணமகன் வலக்கையில் கட்டல்

ஓர்வரு கண்க ளிணைக்கயலே உமையவள் கண்கள் இணைக்கயலே
ஏர்மரு வுங்கழ னாகமதே எழில்கொளு தாசன னாகமதே
நீர்வரு கொந்தள கங்கையதே நெடுஞ்சடை மேவிய கங்கையதே
சேர்வரு யோகதி யம்பகனே சிரபுர மேயதி யம்பகனே.

ஆசிரியர் பின்வரும் பாடலை ஓத மணமகளுக்கு இடக் கையில் மணமகன் காப்புக்கட்டுதல்.

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
தந்தி மகன்றனே ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே.

6. பெற்றாேர் வழிபாடு

மணமகன் தன் பெற்றாேரின் திருவடியைத் தூய நீரால் விளக்கிப் பொட்டிட்டு மலர் தூவிப் பின்வரும் திருப்பாட்டை ஓதிக் கொண்டு வழிபடவேண்டும்.

அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்று வாய்நீ
துணையாய்என் நெஞ்சம் துரப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் தும்நீ
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.

மண மகள் தன் பெற்றோரின் திருவடியை நீரால் விளக்கி மலர் தூவிப் பின்வரும் திருப்பாடலை ஓதிக்கொண்டு வழிபடுதல்.