பக்கம்:தமிழ்த் திருமண முறை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

8.செந்தீவேட்டல்

இந் நிகழ்ச்சிக்குச் சமித்து, நெய், பொரி, மணல் ஆகியவை வேண்டும்.

மணல் பரப்பிச் சமித்தினை இட்டுத் தீ வளர்த்தல். மணமகனைக் கொண்டு செந்தீயில் சுள்ளியும் நெய்யும் இடச் செய்தல். ஆசிரியர் பின்வரும் பாடல்களை ஓதுதல்.

நமச்சிவாய வாழ்க!நாதன்தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க!
கோகழி யாண்ட குருமணிதன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க!

ஆடக மதுரை அரசே போற்றி!
கூடல் இலங்கு குருமணி போற்றி!
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி!
இன்றெனக் காரமுது ஆனாய் போற்றி!
மூவா நான்மறை முதல்வா போற்றி!
சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி!
மின்னார் உருவ விகிர்தா போற்றி !
கல்நார் உரித்த கனியே போற்றி !
காவாய் கனகக் குன்றே போற்றி!
ஆவா என்றனக்கு அருளாய் போற்றி !
மானேர் நோக்கி மணாளா போற்றி!
வானகத் தமரர் தாயே போற்றி!
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி !
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி !
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி!
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி!