பக்கம்:தமிழ்த் திருமண முறை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
21

வேண்டும். பின் கையெடாமல் திருநீறு, குங்குமம் சந்தனம், மலர் இவற்றை முடியில் வைத்தல் வேண்டும்.

மணமகன் மணமகளுக்கு மங்கல நாண் அணியும் பொழுது ஆசிரியர் பின்வரும் பாடல்களை ஓதுதல் வேண்டும்.

1.மண்ணினல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணின் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலே
கண்ணின் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை யிருந்ததே.

2.நன்றுடை யானை தீயதில் லானை நரைவெள்ளேறு
ஒன்றுடை யானை உமையொரு பாகம் உடையானை
சென்றடையாத திருவுடை யானை சிராப் பள்ளிக்
குன்றுடை யானைக் கூறவென் உள்ளம் குளிரும்மே.

3.முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
   மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
   பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
   அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தை
தன்னை மறந்தாள் தன்னாமம் கெட்டாள்
   தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.

12. பொட்டு இடுதல்

மணமகளுக்கு மணமகன் பொட்டு இடுதல். அப்போது, ஆசிரியர் பின்வரும் பாடலை ஓதுவார்.

கலவஞ்சேர் கழிக்கானல் கதிர் முத்தம் கலந்து எங்கும்
அலவஞ் சே ரணை வாரிக் கொணர்ந் தெறியும் அகன்றுறைவாய்
நிலவஞ்சேர் நுண்ணிடைய நேரிழையா ளவளோடும்
திலகம்சேர் நெற்றியினர் திருவேட்டக் குடியாரே.