பக்கம்:தமிழ்த் திருமண முறை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
27

தருதுயரம் தாடயேல் உன் சரணலல்லால் சரணில்லை
விரைகுழுவும் மலர்ப் பொழில்சூழ் வித்துவக் கோட்டம்மானே!
அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள் தன்
அருள் நினைந்தே யழும்குழவி யதுவேபோன் றிருந்தேனே.10


வந்தாய்என் மனம்புகுந்தாய் மன்னி நின்றாய் !
நந்தாத கொழுஞ்சுடரே !எங்கள் நம்பி !
சிந்தா மணியே திருவேங்கடம் மேய
எந்தாய் ! இனியான் உன்னை என்றும்விடேனே.11

வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை
விழுமிய முனிவர் விழுங்கும்
கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக்
குவலயத் தோர்தொழு தேத்தும்
ஆதியை அமுதை என்னை யாளுடை
யப்பனை ஒப்பவ ரில்லா
மாதர்கள் வாழும் மாடமா மயிலைத்
திருவல்லிக்கேணி கண்டேனே.12

வாழக் கண்டோம் வந்துகாண்மின் தொண்டீர்காள் !
கேழல் செங்கண் மாமுகில் வண்ணர் மருவுமூர்
ஏழைச் செங்கால் இன்துணை நாரைக்கு இரைதேடி
கூழைப் பார்வைக் கார்வயல் மேயும் குறுங்குடியே.13

பாருருவி நீரெரிகால் விசும்பு மாகிப்
பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற
ஏருருவில் மூவருமே யென்ன நின்ற
இமையவர்தம் திருவுருவே றெண்ணும்போது
ஓருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ
ஒன்று மாகடலுருவம் ஒத்து நின்ற
மூவுருவும் கண்டபோது ஒன்றாம் சோதி
முகிலுருவம் எம்மடிக ளுருவந் தானே.14