பக்கம்:தமிழ்த் திருமண முறை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் கண்ட காதலர்


1. அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.

இவள் இச் சோலையில் வாழும் தெய்வமகளோ, சிறந்த மயிலோ, அல்லது மக்கள் இனத்தைச் சேர்ந்த பெண்தானோ; இவள் இன்ன வகையைச் சார்ந்தவள் எனத் துணிந்து சொல்ல முடியாமல் என் மனம் மயங்குகின்றது.

2. இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

இவளுடைய மைதீட்டிய கண்களுக்கு இரண்டு வகையான பார்வை இருக்கிறது. அவற்றுள் ஒரு பார்வை நோயை உண்டாக்குவது, மற்றாெரு பார்வை அந்நோய்க்கு மருந்து.

3. ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.

புறத்தே, அயலார்போல் அன்பில்லாத பொது நோக்கால் நோக்குதல் அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள ஓர் இயல்பு ஆகும்.

4.கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்
என்ன பயனும் இல
.

காதலொடு கூடிய இருவர் கண்களுள் ஒருவர் கண்கள் மற்றாெருவரது கண்களை நோக்குமேயானல் அவர்கள் சொல்லக் கூடிய வாய்ச் சொற்களால் ஒரு சிறிதும் பயன் இல்லை.

5.கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

கண்ணால் கண்டும், காதால் கேட்டும், நாவால் சுவைத்தும் மூக்கால் மோந்தும், உடம்பால் தொட்டும் அனுபவிக்கப்படும் ஐம்புல இன்பங்களும் ஒளி பொருந்திய வளையலணிந்த இவளிடத்தே உள்ளன.